கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் பின்னர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 14 சீசன்கள் முடிந்துள்ளன.
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரசிகர்களை கொண்டே அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதனை ஐபிஎல் தொடக்க காலத்தில் இருந்தே மகேந்திர சிங் தோனி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதுவரை 4 முறை சாம்பியன் படத்தை கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் புதிதாக இரு அணிகள் அறிமுகம் ஆக உள்ளது. அதனால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022யில் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்க வைத்து கொள்ளுங்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
அப்படி பார்த்தால் தோனி, டுபலஸிஸ், ருதுராஜ் கெய்க்வாட் , ரவீந்திர ஜடேஜா போன்ற நான்கு தான் சிஎஸ்கே அணியால் தக்க வைத்துக்கொள்ள இருக்கும் வீரர்கள். இப்பொழுது தோனியை விட சிஎஸ்கே அணிக்கு இவர் தான் மிகவுன் முக்கியமான வீரராக மாறியுள்ளார் என்பது தான் உண்மை.
கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சிஎஸ்கே அணியின் அறிமுகம் ஆனவர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் சில போட்டிகளில் சொல்லும் அளவுக்கு ஒன்றும் விளையாடவில்லை. ஆனால் 2020 இறுதியாக விளையாடிய 3 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். பின்னர் இந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் அனைவரும் கையை வாயில் வைக்கும் அளவுக்கு பேட்டிங் செய்துள்ளார்.
அதனால் இவர் தான் தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியால் நீண்ட நாட்கள் தக்க வைத்துக்கொள்ள போகும். அதுமட்டுமின்றி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்தது இந்திய அணியின் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிரங்குவார் என்று எதிர்பார்க்க படுகிறது…. !!!!
சிஎஸ்கே ரசிகர்களா நீங்கள் அப்போ சொல்லுங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் முக்கியமா ?? இல்லையா ?? என்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comment பண்ணுங்க…..!!!!!