ஐபிஎல் போட்டிகளில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரு அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இதனை ஐபிஎல் தொடங்கிய 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை மகேந்திர சிங் தோனி தான் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதுவரை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சு வார்த்தை ஆரம்பித்துள்ளது. என்னதான் இன்னும் ஐந்து மாதங்கள் இருந்தாலும் ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது தான் உண்மை. ஏனென்றால் அடுத்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டியில் புதிதாக இரு அணிகள் அறிமுகம் ஆகியுள்ளது.
அதில் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற போவதால் பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளது பிசிசிஐ.
நவம்பர் மாதம் இறுதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் பிசிசிஐ மற்றுமின்றி அனைத்து அணிகளும் தக்கவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். பின்னர் இந்த மாதம் முழுவதும் புதிய அணிகளுக்கான கால அவகாசம் கொடுப்பட்டுள்ளது.
புதிய இரு அணிகளும் ( லக்னோ மற்றும் அகமதாபாத் ) அதிகபட்சமாக மூன்று வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று, அதில் ஒரு வெளிநாட்டு வீரர் மற்றும் இரு இந்திய வீரரை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது பிசிசிஐ……!
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது பிசிசிஐ. இருந்தாலும் பல முக்கியமான வீரர்களை தக்கவைக்க முடியாமல் தவறவிட்டுள்ளது தான் உண்மை.
வருகின்ற பிப்ரவரி மாதத்தில் ஏலம் நடத்தப்போவதாக பிசிசிஐ கூறிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் -ஐ- கைப்பற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் புனே ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார்.
ஆனால் இவர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இவர் தக்கவைப்படவில்லை. அதனால் இவரை சிஎஸ்கே அணி ஏலத்தில் கைப்பற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் மிடில் ஆர்டரில் சரியான ஒரு வீரராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதுமட்டுமின்றி சென்னை அணி தடைசெய்யப்பட்ட காலத்தில் புனே அணியில் தன மகேந்திர சிங் தோனி, ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் விளையாடியுள்ளனர். அதில் தோனி தலைமையிலான 2016ஆம் ஆண்டு புனே அணியில் 8 போட்டிகளில் விளையாடிய ஸ்மித் 270 ரன்களை விளாசியுள்ளார்.
அதில் அதிகபட்சமாக 101 ரன்களை அடித்துள்ளார். அதனால் தோனி இவரை சரியாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இரு மாதங்களில் தொடங்கியுள்ளது ஐபிஎல் 2022 போட்டிக்கான மிகப்பெரிய ஏலம் அதில் யார் சிஎஸ்கே அணியில் தக்கவைக்க வேண்டும் ? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS செய்யுங்கள்…!