ஐபிஎல் பேச்சு ஆரம்பித்தால் போதும், தோனி எப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்ற கேள்வி தான் எழுந்து வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், இன்னும் ஓராண்டு அல்லது இரு ஆண்டுகள் நான் சிஎஸ்கே அணியில் விளையாடுவேன் என்பதை அவரே கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022யில் புதிதாக இரு அணிகள் ஐபிஎல் போட்டிகளில் இணைய போவதாகவும், அதில் லக்னோ மற்றும் அஹமதாபாத் என்பதையும் வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும், அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் டோனி, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது சிஎஸ்கே. இருந்தாலும் தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது..?
;ஏனென்றால் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதில் சிஎஸ்கே அணியை தவிர்த்து மற்ற அணிகளில் பல கேப்டன்கள் மாறியுள்ளனர். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடக்கத்தில் இருந்து இப்பொழுது வரை மகேந்திர சிங் தோனி தான் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
அதனால் தான் சிஎஸ்கே அணியை யார் அடுத்த கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி பார்த்தால், சிஎஸ்கே அணியில் பல ஆண்டுகளாக விளையாடிய வருகிறார் ரவீந்திர ஜடேஜா, அவராக இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அப்பொழுது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார் ருதுராஜ் கெய்க்வாட். முதலில் சொதப்பல் ஆட்டத்தை விளையாடினாலும், பின்னர் போக போக ரன்களை அடித்து தொம்சம் செய்தார்.
பின்னர், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2021யில் பல அரைசதம் அடித்து, ஒரு சதம் அடித்து அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட் என்பது தான் உண்மை. இப்பொழுது விஜய் ஹசாரே கோப்பை நடைபெற்று வருகிறது.
அதில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக உள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். இதுவரை 5 போட்டிகளில் விளையாடி அதில் நான்கு போட்டியில் வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, ஐந்து போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் நான்கு சதம் அடித்துள்ளார்…!
அதனால் நிச்சியமாக சிஎஸ்கே அணியையும் சிறப்பாக வழிநடத்த அதிக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, இதுவரை ரவீந்திர ஜடேஜா எந்த அணியையும் கேப்டனாக வழிநடத்திய அனுபவம் இல்லை. ஆனால் இளம் வீரருக்கு வாய்ப்பு கேப்டன் வாய்ப்பு வழங்கப்படுமா ?? இல்லையா ?? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!