முதல் டி20 போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ல், பார்வையாளர்கள் மத்தியில் இருந்த தனது சகோதரியிடம் “காதலி எங்கே?” என்று விசாரித்த தீபக் சஹர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின்போது, நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில், பவுண்டரி அருகில் நின்றுகொண்டிருந்த தீபக் சஹாரை பார்வையாளர்கள் மத்தியில் இருந்து அவரது சகோதரி மாலதி சஹார் அழைத்தார்.
அப்போது அவரிடம், “அவர் எங்கே?” என ஹிந்தியில் கேள்வி எழுப்பினார். தனது காதலியை பற்றி தீபக் சஹர் விசாரிக்கிறார் என அறிந்த மாலதி சஹார், “மேலே இருக்கிறார்.” என பதிலளித்தார். இதனை வீடியோவாக பதிவு செய்த மாலதி சஹார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய சில மணி நேரங்களிலேயே வைரலாகியுள்ளது.
இதற்கு முன்பாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின்போது, தீபக் சஹர் தனது காதலியிடம் பார்வையாளர்கள் மத்தியில் காதலை வெளிப்படுத்திய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவியது. இந்த நிகழ்வின் வீடியோவை தீபக் சஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது வரை அதனை 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இந்த காதல் ஜோடியின் மற்றொரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் வைரலாகியுள்ளது.
போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த முதல் இன்னிங்சில் எட்டாவது ஓவரின் போது இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே போட்டியில் 18-வது ஓவரை தீபக் சஹர் வீசினார். அப்போது இவரை எதிர்கொண்ட மார்ட்டின் கப்தில் முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார். சிக்சர் அடித்த பந்தைக் கூட பார்க்காமல் தீபக் சஹாரை முறைத்தபடி நின்றார். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது பந்தில் கப்தில் விக்கெட்டை வீழ்த்தி, இம்முறை தீபக் சஹார் அவரை மீண்டும் முறைத்தபடியே நின்றார். இதற்காக தீபக் சஹாரை சற்றும் எதிர்கொள்ள முடியாமல், தலைகுனிந்தபடி மைதானத்தை விட்டு வெளியேறினார் கப்தில். இதன் வீடியோ பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.