தோனி இப்படி செய்வார் என்று நான் சாத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை ; ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் மஹேந்திர சிங் தோனி. போட்டிகளில் மட்டுமின்றி சக வீரர்களிடமும் தான்.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதில் ஒருவர் தான் ஹார்டிக் பாண்டிய. இந்திய அணியின் முன்னணி பவுலிங் ஆல் ரவுண்டர் ஆக களமிறங்கிய விளையாடி வந்தார் ஹார்டிக் பாண்டிய.

ஆனால் சமீபத்தில் அவருக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரால் சரியாக பேட்டிங் மற்றுமின்றி பவுலிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து வாய்ப்புகளையும் இழந்து வந்தார் ஹார்டிக் பாண்டிய. இதற்கிடையில் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வந்தார் ஹார்டிக் பாண்டிய.

ஆனால் இந்த முறை அணியில் தக்கவைக்கப்படவில்லை என்றதால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இப்பொழுது அகமதாபாத் அணியின் கேப்டனாக மாறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய. சமீபத்தில் ஹார்டிக் பாண்டிய அளித்த பேட்டியில் மகேந்திர சிங் தோனி பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

தோனியை பற்றி கூறுகையில் ; நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல விஷயங்களை கற்று கொண்டே வருகிறேன் ,அதிலும் குறிப்பாக தோனியிடம் அதிகம் கற்றுள்ளேன். நான் பல தவறுகள் செய்துள்ளேன். அதுமட்டுமின்றி அதில் இருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தோனி என்னிடம் கூறுவார்.

எப்பொழுதும் தோனி அனைத்து போட்டிகளிலும் நம்முடன் விளையாடும் போது, அவர் கவனித்துக்கொண்டே தான் வருகிறார் என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய. தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான போட்டியில் ஹார்டிக் பாண்டிய அணியில் இடம்பெறவில்லை. இதனை பற்றி பேசிய ஹார்டிக் பாண்டிய ;

சரி, நான் ஒரு ஆல் ரவுண்டராக தான் விளையாட ஆசைப்படுகிறேன். அதற்கு தான் நான் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டதற்கு முக்கியமான காரணம். நான் இப்பொழுது வலுவாக இருக்கின்றேன், அதுவும் அகமதாபாத் அணியின் கேப்டனாக சிறப்பாக விளையாட என்னை தயராகிக்கொண்டு வருகிறேன் என்றும் கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here