நாம ஜெயிச்சிட்டோம் Maara ..! என்பது போல ஜடேஜா செய்த செயல் இணையத்தை கலக்கி வருகிறது ; முழு விவரம் இதோ ;

0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்..!

நேற்று நடந்த போட்டியில் டுப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு வழக்கம் போல தொடக்க ஆட்டம் சரியாக இல்லாமல், ருதுராஜ் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் ஆட்டத்தை இழந்தனர். இந்த முறை சென்னை அணி 160 ரன்களுக்கு குறைவாக தான் கைப்பற்றும் என்று நினைத்தோம்.

ஆனால் ராபின் மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரின் ஆட்டத்தால் சென்னை அணிக்கு ரன்கள் குவிந்தன. அதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 216 ரன்களை அடித்துள்ளது சென்னை. அதில் ராபின் 88 மற்றும் ஷிவம் துபே 95 ரன்களை அதிபட்சமாக அடித்துள்ளனர்.

பின்பு 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணிக்கு தோல்வி காத்திருந்தது. இருவரை போராடிய பெங்களூர் அணி 9 விக்கெட்டை இழந்த நிலையில் 193 ரன்களை அடித்து 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது சென்னை.

இதற்கிடையில், பெங்களூர் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாட தொடங்கினார். அப்பொழுது எதிர்பாராத விதமாக முகேஷ் அவரது தினேஷ் கார்த்திக்-யின் விக்கெட்டை கைப்பற்றாமல் தவறவிட்டார். அதனால் சென்னை அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது.

ஏனென்றால் தினேஷ் கார்த்திக் நிச்சியமாக ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் நிச்சியமாக பெங்களூர் அணிக்கு வெற்றி கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சரியாக ப்ராவோ வீசிய பந்தை எதிர்கொண்டார் தினேஷ் கார்த்திக், அப்பொழுது அதிரடியாக அடித்த தினேஷ் கார்த்திக், அதனை பவுண்டரி லைன் பக்கத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா, சந்தோஷத்தில் மூழ்கினார்.

ஏனென்றால் இது அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு நகைப்பற்றிய முதல் வெற்றியாகும். கேட்ச் பிடித்த பிறகு அவர் செய்த செயல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here