இவர்கள் இருவரால் கிரிக்கெட் வாய்ப்புகளை தவறவிட போகிறார் ஷிகர் தவான் ; அட கொடுமையே.. தவானுக்க இந்த நிலைமை ;

இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்க வீரராக இருந்துள்ளார் ஷிகர் தவான். இவர் சில ஆண்டுகளாக ஐபிஎல் டி20 லீக் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணைந்து விளையாடி வருகிறார். இந்திய அணிக்கு சிறப்பான ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் இருப்பதால் மற்ற வீரர்களை பற்றி யோசிக்க நேரமில்லை.

அதுமட்டுமின்றி சமீப காலமாக ஷிகர் தவானுக்கு வாய்ப்புகள் வால்நகப்படுவதே இல்லை. ஏனென்றால் அவர் இப்பொழுது முன்பு போல் பேட்டிங் செய்ய முடியாமல் இருக்கிறார். அதுமட்டுமின்றி இப்பொழுது விஜய் ஹசாரே கோப்பையில் ஷிகர் தவான் ரன்களை அடிக்க முடியாமல் திணறும் போது, இளம் வீரரான ருதுராஜ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் சதங்களாக அடித்து தொம்சம் செய்து கொண்டு வருகின்றன.

அதில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டியில் சதம் அடித்துள்ளார். அதனால் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷிகர் தவானுக்கு பதிலாக இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமின்றி ஹார்டிக் பாண்டியவுக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயர் இடம்பெற்றால் இன்னும் வலுவான இந்திய அணியாக இருக்ககும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் இப்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் விஜய் ஹசாரே கோப்பையில் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி குறைந்தது 8 அல்லது 9 ஓவர் பந்து வீசிக்கொண்டு வருகிறார். ஆனால் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் நிச்சியமாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. பின்னர், தவானுக்கு இறுதியாக ஒரு வாய்ப்புகள் வழங்கப்படலாம்.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் யார் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க…!