உடனடியாக கேப்டனை மாற்றுங்கள் ..! இவரை எதுக்கு தேவை இல்லாமல் கேப்டனாக உள்ளார் ; ஆகாஷ் சோப்ரா ; முழு விவரம் இதோ;

IPL 2021: ஐபிஎல் 2021 போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். அதேபோல, தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், உடனடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனை மாற்றுங்கள். மோர்கனால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. அதனால் அவரை கேப்டன் பதவியில் இருந்து விலகி ப்ளேயிங் 11 ல் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

டாப் -ஆர்டரில் அவரால் பேட்டிங் செய்யவே முடியவில்லை. அதனால் அவருக்கு அபதிலாக பென் கட்டிங் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 6 போட்டியில் வெற்றி பெற்று இப்பொழுது புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவில் நடைபெற்ற போட்டியில் சில தடுமாற்றத்துடன் தன விளையாடி வந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஆனால் சமீபத்தில் இரண்டாம் பாகம் ஐக்கிய அரபு நாட்டில் தொடங்கியது. அதில் வெங்கடேஷ் ஐயர் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கினார்.

அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய 201 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 67 ரன்களை விளாசியுள்ளார். இதற்கு முன்னாள் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்தார். ஆனால் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த காரணத்தால் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அதன்பின்பு தான் ஈயின் மோர்கன் கேப்டனாக மாறினார். ஆனால் இவரால் அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல முடியவில்லை, ரன்களையும் அடிக்க முடியவில்லை. அதனால் இவர் கேப்டனாக இல்லை என்றால் ப்ளேயிங் 11ல் வேறு ஒரு திறமை வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க முடியும்.

ஆனால் இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது இந்த ஆண்டு. அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2021ல் நிச்சயமாக இவரை அணியில் இருந்து வெளியேற்றும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்கு பிடித்த ஐபிஎல் அணி எது என்பதை COMMENT பண்ணுங்க ….!