தினேஷ் கார்த்திக் விக்கெட்டை இப்படி தான் கைப்பற்றினோம் ; நிக்கோலஸ் பூரான் பேட்டி ;

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுவும் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் வழக்கம்போல பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்டி முதலில் களமிறங்கியது இந்திய.

தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். அவர்கள் மட்டுமின்றி இந்திய வீரர்களுக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் விளையாடியதால் தொடர்ந்து விக்கெட்டை இழந்துகொண்டே வந்தனர்.

19.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 138 ரன்களை அடித்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா 0, சூர்யகுமார் யாதவ் 11, ஸ்ரேயாஸ் ஐயர் 10, ரிஷாப் பண்ட் 24, ஹர்டிக் பாண்டிய 31, ரவீந்திர ஜடேஜா 27, தினேஷ் கார்த்திக் 7, ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி காத்துக்கொண்டு இருந்தது. சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 141 ரன்களை அடித்து இந்திய அணியை 5 விக்கெட்டை வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

மொத்தம் ஐந்து டி-20 போட்டிக்கான தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர். முதல் டி-20 போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சூரியகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக விளையாடி 190 ரன்களை அடித்தனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனான நிக்கோலஸ் பூரான் கூறுகையில் ; ” இப்பொழுது தான் ஒருவழியாக பெருமூச்சு விடுகிறோம். இந்த காலம் எங்களுக்கு சற்று கடினமாக தான் இருக்கிறது. நாங்க நிறைய போட்டிகளில் இறுதிவரை போராடிய குறைவான ரன்களில் தான் தோல்வியை பெற்றுள்ளோம்.”

“எங்கள் அணியில் எனக்கும் (நிக்கோலஸ் பூரான்) மற்றும் ஹெட்மயேர் ஆகிய இருவருக்கும் அதிகப்படியான பொறுப்பு உள்ளது. இருப்பினும் அதிரடியாக விளையாடிய பிராண்டன் கிங் எங்களுக்காக போட்டியில் வென்று கொடுத்துள்ளார். அவர் இதில் இருந்து இன்னும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளவார்.”

“இன்றைய போட்டியில் Obed McCoy வெறித்தமான பவுலிங் செய்தார் என்பது தான் உண்மை. எங்கள் அணிக்காக இந்திய வீரர்களின் விக்கெட்டை தொடர்ந்து கைப்பற்றினார். அதுமட்டுமின்றி, தினேஷ் கார்த்திக்கு நான் ஸ்டம்ப் பார்த்து தான் வீச போகிறேன் என்று சொன்னார் (Obed McCoy), அதேபோல பவுலிங் செய்து விக்கெட்டையும் கைப்பற்றி கொடுத்துள்ளார். அவரது பந்து வீச்சு எங்கள் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார் நிக்கோலஸ் பூரான்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here