அடி தூள்… ! சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டனை ஏலத்தில் கைப்பற்ற திட்டமா ??? ஆனால் தோனி மாதிரி இருக்குமா ??

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டி என்றால் அது ஐபிஎல் டி20 லீக் போட்டி தான். 2008ஆம் ஆண்டு முதல் முதலில் இந்தியாவில் அறிமுகம் ஆனது. பின்னர் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை வெற்றிகரமாக 14 சீசன் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சுவார்த்தை கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்து வருகிறது தான் உண்மை. ஏனென்றால் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலம் மிகப்பெரிய அளவில் நடத்த போவதாகவும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிக ரசிகர்களை கொண்ட அணியாக தான் இன்று வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்ந்து வருகிறது. ஏனென்றால் சென்னை அணியை ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து இப்பொழுது வரை மகேந்திர சிங் தோனி அவர்கள் தான் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பெரிய அளவில் ஏலம் நடத்த உள்ளதால் அனைத்து அணிகளிலும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நான்கு வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

அதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி கொண்டிருந்தார் அப்பொழுது எதிர்பாராத விதமாக அவரது தோள்பட்டையில் பலமாக அடிப்பட்டுவிட்டது. அதனால் ஐபிஎல் 2021 போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.

ஷ்ரேயாஸ் ஐயர்-க்கு பதிலாக ரிஷாப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். பின்னர், அவரே நான் ஏலத்தில் பங்கேற்க போவதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இவரை (ஐயர்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கைப்பற்றினால் நிச்சியமாக நல்ல மிடில் ஆர்டர் இருக்கும். அதுமட்டுமின்றி இவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்திய அனுபவம் உள்ளது.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனிக்கு பிறகு சிறப்பாக வழிநடத்தவும் அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் ஷ்ரேயாஸ் ஐயர்-ஐ ஏலத்தில் கைப்பற்ற முயற்சி செய்ய போவதாக தெரிகிறது…!!! ஷ்ரேயாஸ் ஐயர் சிஎஸ்கே அணியில் இடம்பெறலாமா ??? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here