ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி இன்னும் சில நாட்களில் உலகக்கோப்பை போட்டி நிறைவடைய உள்ளது. ஆனால் இந்த முறை இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணியை அடித்து தொம்சம் செய்தது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 17.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 85 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். பின்பு 86 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது இந்திய அணி.
ஆனால் ஸ்காட்லாந்து அணியை வெல்ல வெறும் 6.3 ஓவர் மட்டுமே ஆனது. ஏனென்றால் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து 80 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் மற்றும் 13.3 ஓவர் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை வென்றுள்ளது இந்திய.
அதனால் புள்ளிப்பட்டியளில் 3வது இடத்தில் உள்ளது இந்திய அணி. ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பித்த நாள் முதல் ஒரு வீரரை பற்றி மற்றொரு வீரர் பேசுவது வழக்கம் தான். அதேபோல, இந்திய அணியின் அதிரடியான வீரர் மற்றும் முக்கியமான வீரரும் இவர் தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம்-உல்-ஹாக் கூறியுள்ளார். அதனை பற்றி பேசிய அவர் , நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மூன்றாவதாக பேட்டிங் செய்தது முட்டாள் தனமான வேலையாக தான் எனக்கு தெரிகிறது.
அப்படி செய்தால் வீரர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும். ஆனால் இப்பொழுது தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள் சிறப்பாக உள்ளனர். அதிலும் முக்கியமாக ரோஹித் சர்மா ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியது பல போட்டிகளில் வெற்றிகளை மாற்றியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில்,
ரஷீத் கான் ஓவரில் வெளுத்து வாங்கினார் ரோஹித் சர்மா. அதே போட்டியில் 74 ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பவுலரான ரஷீத் கான் ஓவரில் ரன்களை அடித்ததால் எதிர் அணியின் முதுகெலும்பு உடைந்தது போல தான் இருக்கும் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம்-உல்-ஹாக்……!!!!