இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் இவருக்கு இடமில்லை ; ராகுல் டிராவிட் உறுதி ;

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில் இப்பொழுது டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது இந்திய. முதல் டி-20 இரு தினங்களுக்கு முன்பு தான் நடந்து முடிந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்:

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 190 ரன்களை அடித்தனர். பின்பு 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது.

ஆமாம், தொடர்ந்து விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் சரியாக பேட்டிங் செய்ய முடியாமல் ரன்களை அடிக்க முடியாமல் தவித்தனர். இறுதிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 122 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய.

அதனால் இப்பொழுது டி-20 போட்டிக்கான தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. இரண்டாவது டி-20 போட்டி நாளை இரவு நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலககோப்பை போட்டிக்கான இந்திய அணி ? ராகுல் டிராவிட் திட்டம் :

இந்த ஆண்டு இறுதியில் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை பற்றிய பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்; “இனிவரும் போட்டிகளில் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட போகும் வீரர்களுக்கு தான் அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.”

இருப்பினும் மிடில் ஆர்டரில் விராட்கோலி-க்கு பிறகு யார் பேட்டிங் செய்ய போகிறார் என்று பல குழப்பங்கள் எழுந்து வருகிறது. முதுகில் தீபக் ஹூடா அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஏதாவது ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்க உள்ளனர். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் டி-20 போட்டியில் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார்.

அதுமட்டுமின்றி, ஸ்ரேயாஸ் ஐயர் எப்பொழுது பவுன்சர் அல்லது வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டால் விக்கெட்டை இறந்துவிடுவார் என்பது தான் உண்மை. இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அங்கு வேகப்பந்து வீச்சாளருக்கு தான் அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படும்.

அதனால் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற வாய்ப்பு மிகவும் குறைவு தான். இருப்பினும் தீபக் ஹூடா அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து பேட்டிங் மற்றுமின்றி அவ்வப்போது பவுலிங் செய்து விக்கெட்டை கைப்பற்றி வருகிறார். அதனால் நிச்சியமாக ஸ்ரேயாஸ் ஐயரை காட்டிலும் தீபக் ஹூடாவுக்கு தான் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here