இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய போவதாக முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை.
அதனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் ரிஷாப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அசைக்க முடியாத பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு ரன்களை குவித்துள்ளது. ஆமாம், அதனால் தான் முதல் இன்னிங்ஸ் -ல் 416 ரன்களை அடிக்க முடிந்தது.
இதில் ரிஷாப் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சதம் அடித்துள்ளனர். இப்பொழுது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் விளையாடிய வருகிறது. இதுவரை 45.3 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 200 ரன்களை அடித்துள்ளனர். இன்னும் 216 ரன்கள் வித்தியாசம் உள்ளது.
இதற்கிடையில், தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேனான பரிஸ்டோவ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆமாம், சரியாக 31.1 ஓவரில் முகமது ஷமி பவுலிங் செய்தார். அதனை பரிஸ்டோவ் எதிர்கொண்டார். அப்பொழுது ஷமி பவுலிங் மிகச்சிறப்பாக இருந்தது.
அப்பொழுது பரிஸ்டோவ் மற்றும் விராட்கோலியே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் அமைதியாக நின்று பேட்டிங் செய், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு நீ சொல்லிக்கொடுக்க தேவையில்லை என்று கூறினார் விராட்கோலி. இதனால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது..!
வீடியோ :
Kohli: Just stand and fkng bat don’t tell me what to do
Virat Kohli Fired Up, Proper Elite Test Match Stuff 🔥#INDvsENG pic.twitter.com/6nqlkEFBJx— Pranjal (@Pranjal_one8) July 3, 2022
இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்தாலும் பரிஸ்டோவ் மட்டும் ஆட்டம் இழக்காமல் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 113 பந்தில் 91 ரன்களை அடித்துள்ளார். பரிஸ்டோவ் விக்கெட்டை கைப்பற்றுமா ? இந்திய அணி ..!