இதை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும் ; இன்னும் ஒரு ஓவர் கிடைத்திருந்தால் சந்தோசமாக இருந்திருக்கும் ; சுப்மன் கில் பேட்டி ;

0

இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதிலும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் 3- 0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ்-அவுட் செய்துள்ளனர்.

மூன்றாவது ஒருநாள் போட்டியின் முழு விவரம் :

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணிக்கு முதல் மூன்று விக்கெட் விளையாட்டு சிறப்பாக அமைந்தது. இருப்பினும் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் மழை பெய்த காரணத்தால் 36 ஓவர் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்தனர்.

முதலில் விளையாடிய இந்திய அணி அதிரடியாக ரன்களை குவித்தனர். அகிலும் தொடக்க வீரரான சுமன் கில் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்து தொம்சம் செய்தார். அதனால் 36 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 225 ரன்களை அடித்தது இந்திய.

அதில் அதிகபட்சமாக தவான் 58, சுமன் கில் 98, ஸ்ரேயாஸ் உயர் 4, சூரியகுமார் யாதவ் 8, சஞ்சு சாம்சன் 6 ரன்களையும் அடித்துள்ளனர். பின்பு 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது.

மழை பெய்த காரணத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்களால் சரியாக விளையாட முடியாமல் விக்கெட்டை தொடர்ந்து இழந்து கொண்டே இருந்தனர். இறுதிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையு இழந்து 137 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 119 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை விளாத்தியுள்ளது இந்திய. அதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 22, பிராண்டன் கிங் 42, நிக்கோலஸ் பூரான் 42 ரன்களை அடித்துள்ளனர். போட்டி முடிந்து பிறகு பேசிய இந்திய அணியின் தொடக்க வீரரான சுமன் கில் பேட்டியளித்துள்ளார்.

அதில் “நானும் சதம் அடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்தேன். ஆனால் மழையை நான் கட்டுப்படுத்த முடியாது. முதல் இரண்டு போட்டிகளில் நான் விக்கெட்டை இழந்தது எனக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருக்கிறது. நான் எப்பொழுது பந்து வீச்சுக்கு தவுந்த மாதிரி தான் பேட்டிங் செய்வேன். எனக்கு இன்னும் ஒரு ஓவர் கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். என்னுடைய விளையாட்டு எனக்கு சந்தோசத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார் சுமன் கில்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here