ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்திய அணி அரை இறுதி செல்லுமா இல்லையா ?? என்ற கேள்விகள் தான் அதிகமாக எழுகின்றன. அதனால் அனைத்து போட்டிகளிலும் வெளுத்து வாங்கி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி.
நேற்று இரவு 7:30 மணியளவில் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கெய்ல் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியும், விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பவுலிங் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை, தொடர்ந்து விக்கெட்டை இழந்ததால் 17.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து வெறும் 85 ரன்களை மட்டுமே அடித்துள்ளது. அதில் முன்செய் 24, கோட்ஸ்ர் 1, கிறோஸ்ப்2, பெரிங்டன் 0, லீஸ்க் 21 ரன்களை அடித்துள்ளனர்.
பின்னர் 86 ரன்கள் அடித்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணி. அதில் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடியதால் 6.3 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 89 ரன்களை அடித்து மாஸ் வெற்றியை பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியளில் 3வது இடத்தில் உள்ளது இந்திய அணி….!!!
போட்டி முடிந்த பிறகு கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் ; நான் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி வெற்றி பெற்றதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அதில் இருந்து நான் எப்படியாவது இந்திய அணியில் விளையாடி தொடர்ந்து கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு…..!!!
அதுமட்டுமின்றி, இந்திய அணி தொடர்ந்து ஐசிசி கோப்பைகளை வென்று வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.இன்னும் இந்திய அணிக்கு சில வாய்ப்புகள் உள்ளது அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற… !! என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்…. !!!