நாளை 28வது போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கென் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோத உள்ளனர். இருவருக்கும் நடக்கும் போட்டி என்பது மிகவும் முக்கியமான போட்டியாகும்…!! இதில் யார் வெற்றி பெருகிறார்களோ அவர்களுக்கு தான் அரையிறுதி செல்லும் வாய்ப்பு என்பது அதிகம் இருக்கும்.
இந்த சமயத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் நிச்சியமாக இதை செய்தே ஆக வேண்டும்…! அதனை புரிந்து கொண்டு சிறப்பான அணியை தேர்வு செய்வார்களா…?? விராட்கோலி மற்றும் ரவி சாஸ்திரி. அப்படி என்ன செய்ய வேண்டும் இந்திய அணி ??
நாளை நடைபெற போகின்ற போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்க போகின்றன. அதனால் அதில் Wrist சுழல் பந்து வீச்சாளர் இடம்பெற்றால் எதிர் அணியின் விக்கெட்டை சுலபமாக கைப்பற்ற முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது…! அப்படி பார்த்தால், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ராகுல் சஹார் தான் இதற்கு சரியான வீரர் என்று பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் யாருக்கு பதிலாக ராகுல் சஹார் இடம்பெருவார் என்று கேள்வி எழுந்துள்ளது.. ! ஏனென்றால் வருண் சக்ரவத்தி-க்கு பதிலாக ராகுல் சஹார் மற்றும் அஸ்வின் , ஜடேஜா போன்ற சுழல் பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றால் எந்த பயனும் இருக்காது…!! பேட்டிங் ஆர்டரில் குழப்பம் ஏற்படும். அதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்ரவத்திக்கு பதிலாக ராகுல் சஹார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்…..!!!!
இந்திய அணியில் நிச்சியமாக இரு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.. யார் யார் அந்த வீரர்கள் ?? ஒன்று வரும் சக்ரவத்தி மற்றும் புவனேஸ்வர் குமார் இவர்கள் இருவருக்கு பதிலாக ஷர்டுல் தாகூர் மற்றும் ராகுல் சஹார் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது…!!!!! சமீபத்தில் இந்திய அணியிம் பயிற்சியாளரிடம் (ரவி சாஸ்திரி) மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் இடம்பெருவார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி ; சூழ்நிலை பொறுத்து தான் அந்த முடிவை எடுக்க முடியும், இப்போ ஏதும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். நாளைய போட்டியில் இந்திய வெற்றி பெறுமா ?? இல்லையா ?? உங்கள் கருத்தை Comment பண்ணுங்க….!!!