உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி உலகக்கோப்பை போட்டி நேற்று முன்தினம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் ஓமன் நாட்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சமிபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.
அதுமட்டுமின்றி இந்த உலகக்கோப்பை 2021 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான மகேந்திர சிங் தோனி ஆலோசகராக அறிவித்துள்ளது பிசிசிஐ. அதனால் தோனியை மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் உடையில் காண ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றன.
உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு முதல் போட்டி பாகிஸ்தான் அணியை எதிர்த்து தான்… !!! அதன் போட்டி இப்போ நடைபெறுமா… !! இல்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனென்றால் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்து அழுத்தம் வருவதாக பிசிசிஐ-யின் உறுப்பினர் ராஜிவ் சுக்ல கூறியுள்ளார்.
உலகக்கோப்பை பற்றிய பேசிய ராஜிவ் சுக்ல ; நாங்கள் விளையாட்டு தான் விளையாடுகிறோம். அதுமட்டுமின்றி இது ஐசிசி சர்வதேச கூட்டமைப்பு எடுத்த முடிவு. அதனால் இதனை மறுக்க முடியாது, விளையாடி தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் சுக்ல…!! இந்த தகவலை கேட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். ஏனென்றால் பல ஆண்டுகளுக்கு பிறகு தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது இந்திய.
வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி அன்று உலகக்கோப்பை போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மோத உள்ளனர். இந்திய அணியின் விவரம் ; விராட்கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட், இஷான் கிஷான், சூர்யகுமார், வருண் சக்ரவத்தி, ராகுல் சஹார், பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஷர்டுல் தாகூர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்த முறை யார் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல போகிறார் ?? என்று உங்கள் கருத்தை COMMENTS பண்ணுங்க….!! !