இன்னுமா இவரை இந்திய அணி நம்புகிறது ? இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருக்க போகிறார் ; ரசிகர்கள் ஆவேசம் ;

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய அணி வென்ற நிலையில் இப்பொழுது டி-20 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

ஆகஸ்ட் 6 மற்றும் 7ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் மீதமுள்ள இரு போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி ஒரு போட்டியில் வென்ற டி-20 போட்டிக்கான தொடரையும் கைப்பற்ற முடியும்.

முன்றாவது போட்டியின் சுருக்கம் ;

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 164 ரன்களை அடித்தனர். பின்பு 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய இந்திய சகிரிக்கெட் அணி 165 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றினார்கள்.

இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடரில் மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி 0, 10, 24 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் ஸ்ரேயாஸ். ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார் ரோஹித்சர்மா.

அதுமட்டுமின்றி ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஷாட் பால், பவுசர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களிடம் அதிகமாக விக்கெட்டை இழந்து வருகிறார். இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அங்கு வேகப்பந்து வீச்சாளருக்கு தான் சாதகமாக இருக்கும். அப்படி இருக்கும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சியமாகி இடம்பெற போவதில்லை.

பிறகு ஏன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்புகளை கொடுத்து வருகிறீர்கள் என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவரவர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் போன்ற அதிரடியான வீரர்கள் இன்னும் அணியில் தான் உள்ளனர்.

இருவரும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளனர். அதில் தீபக் ஹூடா சதம் அடித்துள்ளார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் இறுதியாக விளையாடிய 9 போட்டிகளில் 156 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதாவது ஒரு போட்டிக்கு 19 ரன்கள் என்ற விகிதத்தில் அடித்துள்ளார்.

இதனை பற்றி சில முன்னாள் வீரர்கள் தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி அதனை சரியாக பயன்படுத்தாமல் விளையாடி வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படுமா ? 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here