கடந்த ஜூலை 29ஆம் தேதி முதல் காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகளை கொண்டு போட்டிகள் ஆரம்பித்தது. அதில் ஏ பிரிவில் நான்கு அணியும் பி பிரிவில் நான்கு அணியும் இடம்பெற்றனர். இதுவரை வெற்றிகரமாக லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது அரைஇறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இன்றைய அரை இறுதி போட்டியில் ஹர்மான்ப்ரீட் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நடாலி சிவர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதிலும் ஸ்ம்ரிதி மந்தன அதிரடியாக விளையாடி 61 ரன்களை அடித்தார். பின்பு ஒருவர் பின் ஒருவராக சிறப்பாக விளையாடிய நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 164 ரன்களை அடித்தனர்.
அதில் ஸ்ம்ரிதி மந்தன 61, ஷஃபாலி வர்மா 15, ரொட்ரிகோஸ் 44*, ஹர்மான்பரீட் கவுர் 20, தீப்தி சர்மா 22 ரன்களை அடித்தனர். பின்பு 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. ஆனால் தோல்வி தான் காத்திருந்தது. தொடக்க ஆட்டம் மட்டுமின்றி, ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்தனர்.
இருப்பினும் இங்கிலாந்து கேப்டன் நடாலி சிவரின் அதிரடியான ஆட்டத்தால் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி அடித்தனர். இருப்பினும் இறுதி நேரத்தில் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தனர். இறுதி ஒவரில் 14 ரன்களை அடித்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடி கொண்டு இருந்தது இங்கிலாந்து அணி.
ஆனால் 3வது பந்தில் ப்ருன்ட் விக்கெட்டை இழந்த காரணத்தால் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவானது. அதனால் இறுதி ஓவர் வரை போராடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 160 ரன்களை அடித்தனர். அதில் சோபியா 19, டேனியில் 35, அலிஸ் 13, நடாலி 41, அமி ஜோன்ஸ் 31 ரன்களை அடித்தனர்.
வெற்றியை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, நாளை நடைபெற உள்ள இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்று இரவு 10:30 மணியளவில் தொடங்க போகும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோத உள்ளனர். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் தான் இறுதி போட்டியில் இந்திய அணியுடன் விளையாட உள்ளனர்.