ஐபிஎல் போட்டிகளில் பெறும் சம்பளத்தை விட இந்திய அணியில் அதிகம் வாங்கும் வீரர்களின் பட்டியல் இதோ..! இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..!

இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த லீக் போட்டி என்றால் அது ஐபிஎல் போட்டி தான். கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஆனால் சில வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியில் வரும் சம்பளத்தை விட இந்திய அணியில் அதிகம் பெற்று வருகின்றனர். அதன் முழு விவரம் இதோ :

சிஎஸ்கே : தீபக் சாகர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமான பவுலர் என்றால் அது தீபக் சாகர் தான். அதுமட்டுமின்றி, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் நம்பிகையான பவுலரும் கூட. முக்கியமான போட்டிகளில் அசத்தலான விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளார் சாகர்.

இவர் ஐபிஎல் போட்டிகளில் 80 லட்சம் வாங்கி வருகிறார். ஆனால் இவர் இந்திய அணியில் சி பிரிவில் உள்ளதால், இவருக்கு ஒரு கோடி ரூபாய் அதில் வருமானம் வருகின்றது.

சிஎஸ்கே : ஷர்டுல் தாகூர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தீபக் சஹாருக்கு அடுத்த படியாக ஷர்டுல் தாகூர் இருக்கிறார். இவரது விளையாட்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமின்றி, இந்திய அணியிலும் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தான் அடுத்த ஆல் -ரவுண்டர் என்று இந்திய அணியின் பவுலர் கூறியுள்ளார்.

இவர் ஐபிஎல் போட்டியில் 2.6 கோடி ரூபாய் வாங்கி வரும் நிலையில், இவர் இந்திய அணியில் பி பிரிவில் உள்ளார். அதனால் இவருக்கு இந்திய கிரிக்கெட் அணி 3 கோடி ரூப்பை கொடுத்துள்ளது.

உமேஷ் யாதவ் :

டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் உமேஷ் யாதவ் 1 கோடி ரூப்பைக்கு ஏலம் எடுத்துள்ளனர். அனால் இவர் இந்திய அணியில் பி பிரிவில் உள்ளதால் இவருக்கு ஐபிஎல் போட்டிகளை விட அதிகமாக 3 கோடி ரூபாய் கொடுத்து வருகின்றனர்.

இஷாந்த் சர்மா :

கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்த இஷாந்த் சர்மா, இப்பொழுது மிகவும் முக்கியமான வீரராக உள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதுவரை இவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதில் 300 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இவர் ஐபிஎல் போட்டிகளில் 1.1 கோடி வாங்கி வரும் நிலையில், இந்திய அணியில் இவர் அதிகமான சம்பளம் 5 கோடி ரூபாய் பெற்று வருகிறார்.

முகம்மது ஷாமி :

இந்திய அணியின் வேகா பந் வீச்சாளரான முகம்மது ஷாமி , ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை இவருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து 4.8 கோடி ரூபாய் வாங்கி வருகிறார்.

ஆனால் இந்திய கிரிக்கெட் இவர் ஏ பிரிவில் உள்ளதால் இவருக்கு ஐபிஎல் போட்டிகளில் சம்பளத்தை விட 20 லட்சம் அதிகமாக வாங்கி வருகிறார். அதாவது 5 கோடி ரூபாய்.