நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 37வது போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கெய்ல் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இனி வரும் அனைத்து போட்டிகளும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும்….!!!
அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு தொடக்க ஆட்டம், மிடில் ஆர்டர் போன்ற எதுவுமே சரியாக அமையவில்லை. அதனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்ததால் 17.3 ஓவர் வரை போராடி 85 ரன்களை அடித்தனர். பின்னர் 86 ரன்கள் அடித்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணி.
ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் (ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல்) ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை விளையாடி ரன்களை அதிரடியாக குவித்தனர். அதில் ரோஹித் சர்மா 30, கே.எல்.ராகுல் 50, விராட்கோலி2 மற்றும் சூர்யகுமார் யாதவ் 6 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி.
இதற்கிடையில், இந்திய அணி பவுலிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில், 16 வது ஓவர் பந்து வீசிய ஷமி பந்தை எதிர்கொண்டார் ஷெரீப், அதற்கு ஷமி LBW கேட்டார். ஆனால் நடுவர் விக்கெட்டை கொடுக்கவில்லை, அதனால் ரன்களை ஓட முயன்ற போது இஷான் கிஷான் ஓடி வந்து ரன் அவுட் செய்தார். அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது…..!!! !
வீடியோ ;
— Viki… Dhoni (@Dhoni7Dhonii) November 6, 2021
இந்திய அணி , வருகின்ற போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படி இல்லையென்றால் நிச்சியமாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை தவறிவிடும். வருகின்ற திங்கட்கிழமை அன்று இறுதி போட்டியாக நமீபியா அணியை எதிர்கொள்ள உள்ளது இந்திய கிரிக்கெட் அணி…!!
இந்த முறை அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுமா ?? இந்திய கிரிக்கெட் அணி ??? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…..!!!