இன்று மதியம் 1 மணியளவில் சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டியில், அதில் மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணியும், சுதீப் சாட்டர்ஜீ தலைமையிலான வங்காள அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற வங்காள அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக அணிக்கு தொடக்கத்தில் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. முதல் மூன்று விக்கெட்டை இழந்த கர்நாடக அணிக்கு அதிக ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 160 ரன்களை அடித்தனர்.
அதில் ரோஹன் கடம் 30, ஷரத் 4, மனிஷ் பாண்டே 29, கருண் நாயர் 55, அபினவ் மனோகர் 19, அனிருத ஜோஷி 16 ரன்களையும் அடித்துள்ளனர். பவுலிங்கில் முகேஷ் குமார், ஆகாஷ் தீப், சயன் கோஷ், சாட்டர்ஜீ மற்றும் ஷபாஸ் அஹமத் போன்ற பவுலர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வங்காள அணி. இறுதி ஓவர் வரை போராடி போராடி 8 விக்கெட்டை இழந்து சரியாக கர்நாடக அணியை போல் 160 ரன்களை அடித்தனர். அதனால் போட்டி ட்ராவில் முடிந்தது.
அதனால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. யார் வெற்றி பெறுவார்கள் ? என்று பல எதிர்பார்ப்புகள் இருந்தனர். ஆனால் சூப்பர் ஓவரில் முதலில் வங்காள அணி 5 ரன்களை அடித்து இரு விக்கெட்டை இழந்தது. பின்னர் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இறுதி வாய்ப்புடன் கர்நாடக அணியின் கேப்டன் மனிஷ் பாண்டே மற்றும் கருண் நாயர் களமிறங்கினார்கள்.
அதிலும் வங்காள அணி பேட்டிங் செய்த இறுதி ஓவர் இறுதி பந்தில் இரு ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஆனால் பவுண்டரிகளை அடிக்க தவறிய வங்காள அணி, இரு ரன்களை ஓடி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் கர்நாடக அணியின் கேப்டன் மனிஷ் பாண்டே ரன்-அவுட் செய்த காரணத்தால் போட்டி ட்ராவில் முடிந்தது.
அதில் முதல் பந்தில் இரு ரன்களையும், இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்து மாஸ் ஆக கர்நாடக அணியை வெற்றிபெற செய்துள்ளார் கேப்டன். இப்பொழுது கர்நாடக அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் சரியாக விளையாடவில்லை என்று பல கருத்துக்கள் எழுந்துள்ளன.
ஆனால் இன்றைய போட்டியில் மனிஷ் பாண்டேயின் ஆட்டம் சிறப்பாக இருந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022யில் மனிஷ் பாண்டே எந்த அணியில் இடம்பெற போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்…!