வீடியோ ; முதல் ஓவரில் விக்கெட்டை கைப்பற்றிய இந்திய அணியின் பவுலர் ; வாயடைத்து போன வெஸ்ட் இண்டீஸ் மக்கள் ; உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறுவாரா ?

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நேற்று இரவு தான் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதில் 3 – 0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியது. அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் நாளை இரவு முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்து டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. இதில் ரோஹித் சர்மா, பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற உள்ளனர். ஒருநாள் போட்டியை போலவே டி-20 போட்டியிலும் தொடரை கைப்பற்றுமா ? இந்திய அணி ?

மூன்றாவது போட்டியின் சுருக்கம்:

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைத்தாலும் போட்டியில் நடுவே மழை பெய்த காரணத்தால் 36 ஓவர் பேட்டிங் செய்தது இந்திய கிரிக்கெட் அணி. அதில் 225 ரன்களை அடித்தனர்.

பின்பு 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால் மழை பெய்த காரணத்தால் சரியாக பேட்டிங் செய்ய முடியாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர். 26 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 137 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வென்றது. இதில் இந்திய அணி பவுலிங் செய்த போது பவுலர் கைப்பற்றிய விக்கெட் இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. 2வது ஓவர் பவுலிங் செய்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமத் சிராஜ் சிறப்பாக பவுலிங் செய்தார்.

அப்பொழுது மாயேர்ஸ் மற்றும் பர்ரோக்ஸ் ஆகிய இரு முக்கியமான விக்கெட்டையும் கைப்பற்றினார். அதிலும் மாயேர்ஸ் விக்கெட்டை போல்ட் அவுட் செய்தார். இதனை பார்த்த வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் வாயடைத்து போன வீடியோ இப்பொழுது வெளியாகியுள்ளது..!

இது போன்ற பவுலிங் நிச்சியமாக போட்டியில் வெல்ல முக்கியமான காரணமாக மாறியுள்ளது. முகமத் சிராஜ் 2017ஆம் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். தொடக்கத்தில் [பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்பு விராட்கோலி கேப்டனாக இருந்த காலகட்டங்களில் டெஸ்ட் போட்டிகளில் சிராஜ் விளையாட வாய்ப்பு கிடைத்தது, அதனை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார் என்பது தான் உண்மை.

இன்னும் இரு மாதங்களுக்கு பிறகு நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்கான டி-20 போட்டியில் இந்திய அணியில் இடப்பெறுவாரா சிராஜ் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here