இந்திய அணியில் இப்படி ஒரு பவுலரா ? சூப்பராக ஸ்விங் பவுலிங் செய்கிறார் ; ஜோஸ் பட்லர் பேட்டி ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டி நேற்று இரவு சவுத்அம்டன் மைதானத்தில் நடைபெற தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

முதல் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையவில்லை. ஆமாம், ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினாலும் 24 ரன்களிலும், இஷான் கிஷான் 8 ரன்களை அடித்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்..! இருப்பினும் இந்திய அணிக்கு வலுவான மிடில் ஆர்டர் உள்ளது.

அதில் தீபக் ஹூடா, ஹர்டிக் பாண்டிய, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரன்கள் குவிந்தன. இறுதி வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணியால் 198 ரன்களை அடிக்க முடிந்தது. அதில் ரோஹித் 24, இஷான் கிஷான் 8, தீபக் ஹூடா 33, சூரியகுமார் யாதவ் 39, ஹர்டிக் பாண்டிய 51 ரன்களை அதிகமாக அடித்துள்ளனர்.

பின்பு 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. ஏனென்றால் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர், லிவிங்ஸ்டன், மற்றும் ஜேசன் ராய் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்த வந்தனர்.

அதனால் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாமல் திணறினார்கள். இருப்பினும் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால், இங்கிலாந்து அணியின் விக்கெட் ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்து வந்தனர். அதனால் 19.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 148 ரன்களை மட்டுமே அடித்தது இங்கிலாந்து அணி. அதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு தோல்விக்கான காரணத்தை பற்றி பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோஸ் பட்லர் அளித்த பேட்டியில் ; “இந்திய கிரிக்கெட் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தனர். அதனால் எங்களுக்கு மிகவும் அழுத்தம் ஏற்பட்டது. அதில் இருந்து எங்களால் மீண்டு வர முடியவில்லை.”

“ஆனால் 10 ஓவருக்கு பிறகு நாங்கள் கம்பேக் கொடுத்தோம், ஆனால் ஸ்விங் பவுலிங் தொடர்ந்து அமைத்த காரணத்தால் ரன்களால் ரன்களை அடிக்க முடியாமல் போனது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் எந்த நிலையிலும் அவரால் ஸ்விங் செய்ய முடியும்.”

“ஐபிஎல் போட்டியை காட்டிலும் இப்பொழுது சிறப்பாக ஸ்விங் பவுலிங் செய்கிறார். ஒருவேளை நாங்க அந்த பந்தை எதிர்கொண்டு அடித்திருக்க வேண்டுமோ ..! எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாட கூடிய வீரர்கள் தான். இனிவரும் போட்டிகளில் பார்க்கலாம் என்ன நடக்க போகிறது என்று கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்னவாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here