விராட்கோலி -யை விட மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன் இவர் தான் ; முன்னாள் பாகிஸ்தான் வீரர் ; முழு விவரம் இதோ ;

இந்திய கிரிக்கெட் அணியில் விராட்கோலி தான் ஆபத்தான வீரர் என்று அனைவரும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் விராட்கோலியை விட இவர் தான் மோசமான பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் நாசர் அதிரடி கருத்து . யார் அந்த வீரர் ?

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளது. அதாவது வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதில் பாகிஸ்தான் மற்றும் இந்திய போட்டிகள் வந்துவிட்டாலே அதிரடியாக இருக்கும்.

அப்பொழுது தான் கிரிக்கெட் வீரியம் மக்களுக்கு நன்கு தெரியும். எந்த அணி வலுவான அணி என்று கேட்டால், அது இந்திய தான். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கல் மிகவும் ஆபத்தான வீரர்கள் உள்ளனர். அவர்கள் எப்படி ரன்களை அடிப்பார்கள் என்றே தெரியாது.

குறிப்பாக விராட்கோலி, இந்திய அணியின் கேப்டன் எப்போது வேண்டுமானலும் ரன்களை அடிக்க யோசிக்கமாட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அதில் விராட்கோலியை விட ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆன ரோஹித் சர்மா தான் மிக மிக ஆபத்தான வீரர் என்று கூறியுள்ளார் நாசர். சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் சில இளம் வீரர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தல மகேந்திர சிங் தோனி உலகக்கோப்பை போட்டிகளில் மட்டும் ஆலோசகராக உள்ளார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் தோனியை மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் உடையில் கான ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி; முழு விவரம் இதோ ;

விராட்கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட், ஹார்டிக் பாண்டிய, அக்சர் படேல், ராகுல் சஹார், முகமது ஷமி, பும்ரா, புவனேஸ்வர் குமார், சூரியகுமார் யாதவ், வருண் சக்ரவத்தி,ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான்.