இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்டே ஒரு போட்டி என்றால் அது கிரிக்கெட் போட்டி தான்… இந்தியாவில் அதிக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. என்ன தான் கிரிக்கெட் போட்டிகள் விளையாடினாலும் ஒரு நாள் அதில் இருந்து ஓய்வு பெற்று தான் ஆக வேண்டும்… ! அதேபோல, கூடிய விரைவில் ஓய்வை அறிவிக்க போகும் வீரர்கள் பட்டியல் இதோ ;
1. கேதர் ஜாதவ்
நீண்ட நாட்களாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார் கேதர் ஜாதவ். அதுமட்டுமின்றி 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி 8 போட்டிகளில் விளையாடி வெறும் 62 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் இடம்பெற்றார். ஆனால் அவரது விளையாட்டு சொல்லும் அளவுக்கு இல்லாத காரணத்தால் ஐசிசி 2021 உலககோப்பை போட்டிகளில் இடம்பெற வில்லை….!!!
2. ஹர்பஜன் சிங்
இந்திய அணியின் முன்னனி சுழல் பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங்-க்கு இப்பொழுது வாய்ப்பு கிடைப்பதே இல்லை. அவர் இறுதியாக டி20 சர்வதேச போட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு ஆசியா கோப்பையில் தான். 2015ஆம் தான் இறுதியாக ஒருநாள் போட்டியில் விளையாடினார்….!!
ஆனால் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விளையாடி வந்தார். பின்னர் சிஎஸ்கே அணியில் சிறப்பாக பவுலிங்கை வெளிப்படுத்தி பல வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார் ஹர்பஜன். பின்னர் இப்பொழுது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஆனால் வாய்ப்புகள் சொல்லும் அளவுக்கு கூட கிடைப்பது இல்லை.
3. அமித் மிஸ்ரா :
38வயதான அமித் மிஸ்ரா 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தான் டி20 போட்டியில் விளையாடிய இறுதி போட்டி. இதுவரை இந்திய அணிக்காக வெறும் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடி அதில் 13 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்….!!! இந்திய அணிக்காக இல்லையென்றாலும் ஐபிஎல் போட்டிகளில் மிகவும் முக்கியமான வீரராக அமித் மிஸ்ரா திகழ்ந்து வருகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை வைத்து இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் பல முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது…. !! எந்த வீரர் உடனடியாக இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் நீங்கள் நினைக்குறிர்கள்… !!! என்பதை மறக்காமல் Comments பண்ணுங்க…..!!!