விராட்கோலி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.. !! கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல் டிராவிட் ; டிராவிட் பேசியது இதுதான் ; முழு விவரம் இதோ ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் இருப்பதற்கு முக்கியமான காரணம் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றி தான்…!! ஆமாம்..! 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

சமீபத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் நடைபெற போகின்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியளரான ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி ,விராட்கோலி மற்றும் கங்குலி ஆகிய இருவருக்கும் இடையேயான கேப்டன் பதவி சர்ச்சை நீடித்துக்கொண்டே தான் போகிறது. இதனை பற்றியும் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

இதனை பற்றி ராகுல் டிராவிட் கூறுகையில் ; விராட்கோலி சுற்றி என்ன நடந்தாலும் அவர் எப்பையும் எதை பற்றியும் கவலைப்படமாட்டார். ஆனால் அப்படி அவரை சுற்று பல பிரச்சனைகள் இருந்த போதிலும் அவர் அதனை தவிர்த்துவிட்டார். கடந்த 20வது ஆண்டுகளாக மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமின்றி ,விராட்கோலி பெற்ற பயிற்சிகள், அதற்கு ஏற்ப போட்ட திட்டம், சக வீரர்களுடன் பழகிய விதம் அனைத்தும் அற்புதமான ஒன்று. அவரை சுற்றி பல தவற கருத்துக்கள் எழுந்தாலும் அதனை அவர் கவனிக்காமல் சரியாக நடந்து வந்துள்ளார் என்று விராட்கோலியை பற்றி பெருமையாக பேசியுள்ளார் ராகுல் டிராவிட்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியின் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவரே வெளியேறினார். பின்னர் எதிர்பாராத விதமாக விராட்கோலியை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விளக்கியது. அது விராட்கோலிகே தெரியாது. இந்த பிரச்சனை இப்பொழுது தான் ஒரு அளவுக்கு ஓய்ந்துள்ளது.

இப்பொழுது இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக விராட்கோலியும் உள்ளார். இப்பொழுது விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தான் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாளை விளையாட உள்ளனர். இப்பொழுது 1 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.தொடரை கைப்பற்றுமா ?? இந்திய அணி ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here