இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி20 லீக் போட்டியின் 14வது சீசன் சமீபத்தில் தான் நடந்து முடிந்துள்ளது. அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சந்தோஷமான செய்தி..!
அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022யில் புதிய இரு அணிகள் இடம்பெற போவதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதன்படி சமீபத்தில் தான் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற உள்ளது. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
அதனால் யார் யார் எந்த அணியில் தக்க வைத்து கொள்ள போகிறார்கள் என்ற கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
முதல் 7 போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியுள்ளது சன்ரைசர்ஸ் அணி. அதில் டேவிட் வார்னர் தான் அணியை தலைமை தாங்கி வந்தார். ஆனால் தொடர்ந்து தோல்வியை சந்தித்த காரணத்தால் அதே அணியில் இருக்கும் நியூஸிலாந்து அணியின் கேப்டனான கென் வில்லியம்சன் – ஐ கேப்டனாக மாற்றியது சன்ரைசர்ஸ் அணி.
அதனால் மிகவும் மன வேதனை அடைந்தார் வார்னர். அதனால் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஏலத்தில் பங்கேற்க போவதாக அவரே முடிவு செய்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி யாரை தக்க வைத்துக்கொள்ள போகிறது என்று பல கேள்விகள் எழுகின்றன.
அதில் இப்பொழுது பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதில் முதல் வீரராக கென் வில்லியம்சனை தக்க வைத்து சன்ரைசர்ஸ் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான ரஷீத் கான், இப்பொழுது ஒரு பிரச்சனை கிளப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதில் முதல் வீரரை தக்க வைத்தால் 11 கோடி , இரண்டாவதாக வீரரை தக்க வைத்தால் 9 கோடி என்ற கணக்கு உள்ளது. அந்த தொகை தான் தக்க வைக்கப்படும் வீரர்களுக்கு அணியின் மூலம் வழங்கப்படும். அதில் என்னை தான் நீங்கள் முதல் வீரராக தக்கவைக்க வேண்டும் என்று ரஷீத் கான் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முதல் வீரருக்கும் , இரண்டாவது வீரருக்கும் 4 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது. பணத்துக்காக தான் இப்படி எல்லாம் ரஷீத் கான் செய்கிறாரா ??? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த நிலைமை தேவை தான் என்று வார்னர் ரசிகர்கள் சமுகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!!!!