இவரது இடத்தில் நான் விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ; சூரியகுமார் யாதவ் பேட்டி

0

நேற்று முன்தினம் நடந்து முடிந்த இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பேட்டிங் செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

தொடக்க வீரரான மாயேர்ஸ் அதிரடியாக விளையாட தொடங்கினார். அவரது விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் திணறியது இந்திய அணியின் பவுலர்கள். ஆனால் அவரது (மாயேர்ஸ்) விக்கெட் இழந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 164 ரன்களை அடித்தனர். அதில் பிராண்டன் கிங் 20, மாயேர்ஸ் 73, பூரான் 22, போவெல் 23, ஹெட்மயேர்ஸ் 20 ரன்களையும் அடித்துள்ளனர். பின்பு 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

அதில் தொடக்க வீரரான ரோஹித் சர்மா காயம் காரணமாக அணியில் மைதானத்திலும் இருந்து வெளியேறினார், ஆனால் விக்கெட்டை இழக்கவில்லை. இருப்பினும் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூரியகுமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தனர்.

விக்கெட்டை இழந்தாலும் ஒருவர் பின் ஒருவராக பேட்டிங் செய்தனர். இருப்பினும் 19 ஓவர் வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட்டை இழந்த நிலையில் 165 ரன்களை அடித்தனர். அதனால் 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி.

அதனால் இப்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவ் கூறுகையில் ; ” போட்டி சென்ற விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.”

“அதனால் மீதமுள்ள 16 ஓவர்கள் பொறுப்புடன் பேட்டிங் செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியது. ஏனென்றால் இரண்டாவது டி-20 போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்த பிறகு ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்துகொண்டே சென்றனர். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது.”

“தொடர்ந்து விக்கெட்டை கைப்பற்றிய இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி கிடைத்தது. அதனை மனதில் கொண்டு ரோஹித் சர்மா விலகிய நிலையில் சிறப்பாகவும் பொறுப்புடனும் விளையா வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சூரியகுமார் யாதவ்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here