இந்த ப்ளேயிங் 11 வீரர்களை வைத்து தென்னாபிரிக்கா அணியை வெல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ; முழு விவரம் இதோ ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளு எதிரான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் இரு தினங்களுக்கு முன்பு தான் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் டி-20 போட்டிக்கான தொடரை கைப்பற்றியது இந்திய.

அதனை தொடர்ந்து இன்று இரவு முதல் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று டி-20 லீக் போட்டிகள் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இன்று இரவு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பவும தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் விளையாட உள்ளனர்.

உலகக்கோப்பை போட்டியிக்கு முன்பு இதுதான் இறுதி தொடர். அதனால் நிச்சியமாக சிறந்த ஒத்திகை ஆட்டமாக தான் இருக்கும். இருப்பினும் யார் யார் இன்றைய ஆட்டத்தில் இடம்பெற போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ஹர்டிக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட போகும் இந்திய அணியின் உத்தேச அணியின் விவரம் ;

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், தீபக் சஹார், ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சஹால் மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற அதிகவாய்ப்புகள் உள்ளது.

இதில் இருக்கும் அனைத்து வீரர்களும் ஐசிசி டி-20 2022 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். அதனால் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை இந்த தொடரில் தெரிந்துவிடும். இதில் ஹர்டிக் பாண்டியாவிற்கு பதிலாக தீபக் சஹார் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா அணியை வென்றது போலவே தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் வெல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ? இந்த அணி தான் டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 ஆக இருக்குமா ? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here