ஐபிஎல் ரசிகர்களே தயாராக இருக்கீங்களா ?? ஏனென்றால் இன்னும் சில நாட்களில் ஐபிஎல் டி20 2022 போட்டிக்கான ஏலம் மிகப்பெரிய அளவில் இந்தியவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. ஐபிஎல் 2022யில் புதிதாக இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதில் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.
அதனால் தான் மிகப்பெரிய அளவில் ஏலத்தை நடத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ. அதிலும் புதிய இரு அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகள் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளது பிசிசிஐ. அதனால் எந்த எந்த வீரர்கள் தக்கவைத்து கொள்ள போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.
அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் , தோனி தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவாரா ?? என்று பல கேள்விகள் ஐபிஎல் 2021 இறுதி நேரத்தில் எழுந்தது. அப்பொழுது தோனி நிச்சியமாக என்னுடைய இறுதி போட்டி சென்னையில் தான் என்று கூறியுள்ளார் அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகப்பெரிய சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2021 போட்டிக்கான சிஎஸ்கே அணியின் வெற்றி விழாவில் தோனி, தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்ற பிரபலங்கள் பங்கேற்றார்கள். அதில் பேசிய தோனி ” என்னுடைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நான் நன்றியை சொல்லியே ஆக வேண்டும். அதுமட்டுமின்றி என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நான் தான் எப்பொழுதும் முடிவு செய்வேன்.
உதாரணத்திற்கு என்னுடைய இறுதி ஒருநாள் போட்டி நான் ரஞ்சியில் தான் விளையாடியுள்ளேன். அதேபோல என்னுடைய இறுதி டி20 போட்டி நிச்சியமாக சென்னையில் தான் என்று நான் முன்பே முடிவு செய்துவிட்டேன் என்று சந்தோஷத்தில் கூறியுள்ளார் தோனி. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணி அவரை நிச்சியமாக தக்கவைத்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஜனவரி மாதத்தில் ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் நடத்த உள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் 8 அணிகள் வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதாகவும், பின்னர் டிசம்பர் மாதம் முழுவதும் புதிய அணிகள் தங்களது வீரர்களை தேர்வு செய்துகொள்ளலாம் என்று பிசிசிஐ கூறியுள்ளது….!!