விராட் கோலியை போல நாங்கள் இதனை செய்யவே மாட்டோம் ; பென் ஸ்டோக்ஸ் அதிரடி கருது..!

0

இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதிலும் டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் பெரும்பாலான போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதால், அதற்கான ( டி-20 மற்றும் டெஸ்ட்) போட்டிக்கான கோப்பையை கைப்பற்றியது இந்தியா கிரிக்கெட் அணி.

இப்பொழுது இங்கிலாந்துக்கு அணியிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. இறுதினங்களுக்கு முன்பு நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தனர்.

முதல் களமிறங்கிய இந்தியா அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடி 317 ரன்களை எடுத்துள்ளனர். அதன்பிறகு 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் 46 ரன்களிலும் , பரிஸ்டோவ் 94 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.

அதன்பின்னர் இங்கிலாந்து அணிக்கு நல்ல பார்ட்னெர்ஷிப் அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும். 42.1 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 251 ரன்களை மட்டுமே இங்கிலாந்து அணியின் வீரர்களால் அடிக்கமுடிந்தது. அதனால் மூன்று ஒருநாள் போட்டியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்தியா அணி.

இன்று மதியம் 1:30 மணி அளவில் புனே மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. விராட் கோலியை போல நாங்கள் இதனை செய்யவே மாட்டோம் ; பென் ஸ்டோக்ஸ் அதிரடி கருது..!

எங்கள் விக்கெட்டை எடுக்கும் போது இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்தியா அணியின் வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமான கத்தி அவர்களுது வெற்றியை வெளிப்படுத்துவார்கள் ஆனால் இங்கிலாந்து அணியின் வீரர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவே மாட்டோம்.

ஒரு ஒரு அணிக்கும் அவரவர் ஸ்டைலில் பீல்டிங் செய்யும்போது ஒரு தனி திறன் இருக்கும், அவர்களுது வெற்றிக்கு. ஆனால் எங்களுக்கு அந்த மாதிரியான திறன் கடந்து 4 , 5 ஆண்டுகளால் வேலை செய்யவில்லை. அதுமட்டுமின்ற இன்றைய போட்டியில் நிச்சியமாக இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்றும் இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here