யாரா இருந்தாலும் இந்த மாதிரி பண்ணாதீங்க..! ரசிகர்கள் செய்த செயலால் கடுப்பான சிராஜ் ; ரிஷாப் பண்ட் ஓபன் டாக்..! என்னதான் ஆச்சு ?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு பிறகு இப்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டியில், முதல் போட்டியில் ட்ராவில் முடிந்துவிட்டது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் அதில் யார் வெற்றிபெறுவார்கள் என்று தெறியாமல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்துள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவத்தை பற்றி ரிஷாப் பண்ட் பேசியுள்ளார். அதில் பேசிய ரிஷாப் பண்ட், இந்திய அணி பீல்டிங் செய்யும்போது இங்கிலாந்து அணியின் மக்களில் ஒருவர் பந்தை வேணுமென்று முகமது சிராஜ் மீது பந்தை வீசினார்.

அதனால் சிராஜ் மிகவும் கோவமாக இருந்தார். இந்த மாதிரி பீல்டிங் செய்யும்போது இப்படியெல்லாம் செய்யவே கூடாது என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷாப் பண்ட் கூறியுள்ளார். பெரும்பாலும் கிரிக்கெட் போட்டிகளில் இப்படியெல்லாம் நடப்பது சாதாரணம் தான்.

இந்த மாதிரியான நிகழ்வுகள் ஐபிஎல் போட்டிகளில் கூட அடிக்கடி நடக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் டுப்ளஸிஸ் மீது காலனி வீசியுள்ளனர், கிரிக்கெட் ரசிகர்கள். இப்படி செய்வது மிகவும் தவறான ஒன்று. ஏனென்றால் அனைத்து போட்டிகளிலும் ஒரே மாதிரியான ஆட்டத்தை விளையாடவே முடியாது உண்மை.

அடுத்த 4வது டெஸ்ட் போட்டி வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதில் இந்திய அணி வெற்றி பெறுமா?? இல்லையா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இரண்டாவது போட்டியில் 151ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்திய.

மூன்றாவது போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி. செப்டம்பர் 2ஆம் தேதி ஆண்டு 4வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.