ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 28வது போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோத உள்ளனர்.
முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி. ஏனென்றால் இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை கைப்பற்ற முடியும்.
அதனால் இரு அணிகளும் பலமான பயிற்சியை செய்து வருகின்றனர். நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, ஏனென்றால் நியூஸிலாந்து அணியின் வீரர் Lockie Feuguson வெளியேறியதால், அவருக்கு பதிலாக ஆடம் மிலன் இடம்பெற்றுள்ளார்.
இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2021 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய வீரர். எப்படி பாகிஸ்தான் பவுலர் அப்ரிடி செய்தது போல, நியூஸிலாந்து அணி மிலன் அதேபோல மிரட்டல் பவுலிங் செய்வார் என்று எதிர்பார்க்க படுகிறது.
இதனை பற்றி பேசிய ஆடம் மிலன் ” எனக்கு தெரிஞ்சு விளையாட்டின் அற்புதம். போட்டிகளில் விளையாட நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மிலன். நான் அணியில் இணைந்ததால், அணிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் மிலன்.
ஆடம் மிலன் பவுலிங் இந்தியா அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தால் நிச்சியமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக தன இருக்கும்… என்ன செய்ய போகிறது இந்திய அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி அதிலும் தோல்வியை சந்தித்து, குரூப் B புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் உள்ளது இந்திய அணி. இனி வரும் போட்டிகளில் நிச்சியமாக இந்திய அணி வெற்றிபெற்றே ஆக வேண்டும். நிச்சியமாக ப்ளேயிங் 11 மாற்றத்துடன் தான் இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்க படுகிறது….!!