இந்த ஐபிஎல் அணி யாரையும் தக்கவைக்க போவதில்லை ; வெளியான அதிர்ச்சி தகவல் ; இப்படியுமா நடக்கும் ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2022 போட்டியில் மிகப்பெரிய அளவில் ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

ஏன் மிகப்பெரிய அளவில் ஏலம் இந்த முறை நடைபெற உள்ளது ??

ஐபிஎல் போட்டியில் கடந்த 2021ஆம் ஆண்டு சீசன் வரை 8 அணிகள் இருந்தன. ஆனால் அடுத்த ஆண்டு இரு அணிகள் (லக்னோ மற்றும் அகமதாபாத்) அறிமுகம் ஆகியுள்ளது. அதனால் மிகப்பெரிய அளவில் நடத்த போவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற போவதால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளில் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் 8 அணிகளின் உரிமையாளர்களும் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளனர்.

இதற்கிடையில் அந்த 8 அணிகளில்  ஒரு அணி மட்டும் யாரையும் தக்க வைத்துக்கொள்ள போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். எந்த அணி இப்படி செய்தது ?

ப்ரீத்தி ஜிந்தா உரிமையாளராக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற போவதால் கே.எல்.ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து விலகி ஏலத்தில் இடம்பெற போவதாக அவரே அறிவித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனே இப்படி செய்வது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் யாரையும் தக்கவைத்து கொள்ள போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை பஞ்சாப் கிங்ஸ் அணி.

அதிலும் 2014ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இறுதி போட்டி வரை முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி. பின்னர் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி. அதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி….!!!

வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் பிசிசிஐ கொடுத்துள்ளது. அதனால் இன்னும் இரு நாட்களில் யார் யார் எந்த அணியில் தக்கவைத்து கொள்ள படுவார்கள் என்பது தெரியவரும். என்ன செய்ய போகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்….!!!

கிரிக்கெட் ரசிகர்களே…!!! உங்களுக்கு பிடித்த அணி எது ?? அதில் யார் யார் தக்கவைத்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்குறிர்கள்…!! மறக்காமல் Comments பண்ணுங்க.. !!