WTC 2021; இந்திய அணியில் இந்த இருவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக இருந்தால் மாஸ் ஆக இருக்கும் ; ஆகாஷ் சோப்ரா அதிரடி கருத்து..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியில் யார் வெற்றி பேற்றுகோப்பையை கைப்பற்ற போகிறார்கள் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த போட்டி இங்கிலாந்து நாட்டில் சவுத்அம்ப்டன் -னில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒருவேளை அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தால் போட்டியி பார்க்க ரசிகர்கள் அனுமதிப்படுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

பிசிசிஐ வெளியிட்ட இந்திய வீரர்களின் பட்டியல் ;

சில தினங்களுக்கு முன்பு இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் முக்கியமாக ஹார்டிக் பாண்டிய இல்லை என்பதால் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம் 20 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதில் கேப்டனாக விராட் கோலி , துணை கேப்டனாக ரஹானே, சுமன் கில், மயங்க அகர்வால், புஜாரா, விஹாரி,ரிஷாப் பண்ட் , ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், முகம்மது ஷாமி, முகம்மது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, தாகூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், சஹா , பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு இவர்கள் ஒபெநிங் செய்தல் சிறப்பாக இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து ;

இந்திய அணியை பிசிசிஐ அறிவித்த பிறகு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்தை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். அதனை பற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா ; சுமன் கில் மற்றும் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா இனைந்து பேட்டிங் செய்தால் மாஸ் ஆக இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.