இந்த இரண்டு வீரர்கள் இனி RCB-க்கு..!! பெங்களூரு அணியில் தக்கவைக்கப்படும் 4 வீரர்களில் 2 பேர் உறுதி!! டிவில்லியர்ஸ் இடத்தில் புதிய வீரர்.. இது நம்ம list-லையே இல்லையே..!

0

பெங்களூரு அணி தக்க வைக்கும் 4 வீரர்களில் இரண்டு வீரர்களின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிற தகவல்கள் வெளியாகின்றன.

ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வருகிற ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது. 15 வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் என்கிற 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆகையால் அடுத்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த தொடருக்கு முன்பாக டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடத்தப்பட உள்ளது. 

மெகா ஏலத்திற்கு முன்பு, ஒவ்வொரு அணியும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 2 இந்திய வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் என்கிற அடிப்படையில் நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். தக்கவைப்பதற்கான இறுதி கெடு வருகிற 30-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் 4 வீரர்களின் பட்டியலை உறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

அதன் பின்னர் மெகா ஏலம் நடத்தப்படுவதற்கு முன்பாக, புதிதாக இணைந்துள்ள இரு அணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக, மற்ற அணிகள் ஏலத்தில் பங்கேற்கும்முன், இவர்கள் பங்கேற்று இரு அணியும் தலா 4 வீரர்களை ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

இந்நிலையில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்க வைக்கும் 4 வீரர்களில் இரண்டு வீரர்களின் பெயர்கள் தற்போது வரை உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அந்த அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

ஆகையால் அவர் அடுத்த சீசனில் விளையாடவில்லை. அதேபோல் கேப்டன் விராட் கோலியை விட்டுக்கொடுக்க அந்த அணி தயாராக இல்லை என்பதால், முதல் வீரராக அவரையும், கடந்த சீசனில் பெங்களூரு அணியில் இணைந்த மேக்ஸ்வெல் இருவரையும் தக்கவைக்க உள்ளதாக தற்போதுவரை செய்திகள் வெளிவருகின்றன.

இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி 4 வீரர்களில் இரண்டு வீரர்களை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. அதாவது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தக்கவைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நட்சத்திர வீரர் பொல்லார்ட் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இருக்கிறார். அதேபோல் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா இவர்களில் யாராவது ஒருவரை தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, கேப்டன் தோனி அடுத்த மூன்று சீசன்களில் சென்னை அணிக்காக விளையாடுவார் என உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதேபோல் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் தக்கவைக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும் வெளிநாட்டு வீரருக்கான இடத்தில்  மொயின் அலியிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அந்த இடத்தில் சாம் கரனை தக்கவைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here