தோனிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி ;; சிஎஸ்கே அணியின் முதல் போட்டியிலேயே இரண்டு முக்கியமான வீரர்கள் விளையாட வாய்ப்பு இல்லை ; முழு விவரம் ;

ஐபிஎல் 2021 ; ஐபிஎல் 2021 கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் கோலாகலமாக ஆரம்பித்தது. பின்பு கொரோனா காரணமாக போட்டிகள் ரத்து செய்தது பிசிசிஐ. பின்பு ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் போட்டிகளை உடனடியாக ரத்து செய்து அவரவர் வீட்டுக்கு வழி அனுப்பிவைத்துள்ளது பிசிசிஐ.

இன்னும் 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில் போட்டிகளை ஐக்கிய அரபு நாட்டில் நாளை நடைபெற உள்ளது. அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மொத உள்ளனர். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இந்தமுறை 7 போட்டிகளில் 5 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால் இப்பொழுது சிஎஸ்கே அணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு வீரர்கள் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

யார் அந்த இரண்டு வீரர்கள் ? என்ன காரணம் ?? என்ன செய்ய போகிறார் தோனி ??

சமீபத்தில் தான் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதனால் இங்கிலாந்து அணியின் வீரர் மற்றும் சிஎஸ்கே அணியின் ஆல்- ரவுண்டர் ஆன சாம் கரன் இரு தினங்களுக்கு முன்பு தான் ஐக்கிய அரபு நாட்டுக்கு வந்துள்ளார். அதனால் அவர் இன்னும் மூன்று நாட்கள் தனிமையில் இருக்கும் பட்சத்தில் அவர் நிச்சியமாக முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை.

அடுத்ததாக சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டுபலஸிஸ் தான். அவருக்கு சமீபத்தில் தான் தலையில் பலமாக அடிப்பட்டுவிட்டது. பின்பு அதனை சரி செய்து கொண்டு சி. பி.எல் போட்டியில் விளையாடினார். ஆனால் இறுதியாக காயம் காரணமாக இரு போட்டிகளில் விளையாட முடியாமல் போய்விட்டது.

அதனால் டுபலஸிஸ் முதல் போட்டியில் விளையாடுவது சிரமம் தான். ஆனால் இதில் சாம் கரன் உறுதியாக முதல் போட்டியில் இல்லை, ஆனால் டுபலஸிஸ் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.