இந்த மாதிரி இவர் பேசுவார் என்று நான் மட்டுமில்லை யாருமே எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க ; இந்திய வீரரை புகழ்ந்து பேசிய லதீப் ;

இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே உலகம் முழுவதும் எதிர்பார்த்து கொண்டே இருப்பார்கள். அதில் இந்திய அணி தோல்வி பெற்றாலோ..? அல்லது பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தாலோ ?? அவ்வளவு தான் ரசிகர்கள் பல சர்ச்சையை பேசுவது வழக்கம்.

மற்ற அணிகளுடன் தோல்வியை சந்தித்தால் கூட, இந்திய ரசிகர்கள் அப்படி ஒன்றும் பெரிதாக பேசமாட்டார்கள். ஆனால் நிச்சியமாக பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்களுக்கு இடையே முன்பு மோதல் இருந்தன. ஆனால் இந்த காலத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி விளையாடினால் அப்படி ஒன்றும் பெரிய அளவில் சண்டை வருவதில்லை.

இப்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ட்ரா நிலையில் முடிந்தன. இரண்டாவது இப்பொழுது நடைபெற்று வருகிறது. இன்னும் 313 ரன்களை அடித்தால் பாகிஸ்தான் அணி போட்டியில் வெல்லும்.

இந்த போட்டியை பற்றி இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டர் பக்கத்தில் அவரது நிச்சியமாக நாளை நடைபெறும் போட்டியில் அதிரடியாக விளையாடி ரன்களை அடிக்க போகிறார் என்று சந்தோசமாக ஒரு பதிவு செய்துள்ளார் அஸ்வின்.

இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ரஷீத் லதீப் கூறுகையில் ; இந்த மாதிரி விஷயத்தில் அஸ்வின் தான் எப்பொழுதும் முன்னிலையில் இருந்து விலகினார். நாங்கள் கிரிக்கட் போட்டிகளில் விளையாடும் போது அஜய் ஜடேஜாவிடம் நல்ல ஒரு நட்பு இருந்தது.

ஆனால் அது இப்பொழுது எங்கு போனது என்று தெரியவில்லை. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்பொழுது அவருக்கு என்ன தோன்றுகிறதோ, அதனை வெளிப்படையாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்வார். இது ஒன்றும் புதிதல்ல அவர் (அஸ்வின்) இதனை நீண்ட நாட்களாக செய்து வந்தார்.

பாகிஸ்தான் போட்டியை இந்திய ரசிகர்களும், இந்திய போட்டியை பாகிஸ்தான் ரசிகர்களும் பார்ப்பது வழக்கம் தான். ஆனால் அதனை யாரும் எப்பொழுதும் வெளிப்படுத்த மாட்டார்கள் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீப்.