இந்த இருவரை பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் ; பா… செம பார்ட்னெர்ஷிப் வேற லெவல் ; ஸ்மித் ஓபன் டாக் ;

1 min


-1

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நேற்று முதல் நடைபெற தொடங்கியுள்ளது. அதில் முதல் போட்டியில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர்.

வான்கடே : நேற்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை.

இருப்பினும் மிச்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால் 35.4 ஓவர் முடிவில் 188 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 81, ஸ்டீவன் ஸ்மித் 22, ஜோஷ் இங்கிலீஸ் 26 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு த்ரில் வெற்றி காத்திருந்தது. தொடக்க வீரர்களின் இருந்து சூரியகுமார் யாதவ் வரை பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல், ஹர்டிக் பாண்டிய மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் சேர்ந்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

39.5 ஓவர் முடிவில் 191 ரன்களை அடித்து ஆஸ்திரேலியா அணியை 5 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய. போட்டி முடிந்த பிறகு தோல்வியை பற்றி பேசிய ஸ்டீவன் ஸ்மித் கூறுகையில் :

“வான்கடே மைதானத்தில் இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லை. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர். ஒருவேளை நாங்கள் 250 ரன்கள் அடித்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால் கே.எல்.ராகுல் மாற்றம் ரவீந்திர ஜடேஜாவின் பார்ட்னெர்ஷிப் மிகவும் அருமையாக இருந்தது.”

“குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி அழுத்தத்தில் இருக்கும்போது சிறப்பாக விளையாடி உள்ளனர். நாங்க தொடக்கத்தில் சிறப்பாக தான் ஆர்மபித்தோம். அதிலும் மிச்சேல் மார்ஷ் சிறப்பாக விளையாடினார்.”

“தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. அதனால் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களையும் அடிக்க முடியாமல் போனது. ஆனால் ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் அதனை எப்படி செய்ய வேண்டுமென்று காட்டியுள்ளனர் என்று கூறியுள்ளார் ஸ்டீவன் ஸ்மித்.”


Like it? Share with your friends!

-1

What's Your Reaction?

hate hate
0
hate
confused confused
0
confused
fail fail
0
fail
fun fun
0
fun
geeky geeky
0
geeky
love love
0
love
lol lol
0
lol
omg omg
0
omg
win win
0
win
Web Team

0 Comments

Your email address will not be published. Required fields are marked *