Toss -ல் தோனிக்கு காத்திருந்த ட்விஸ்ட் … நல்ல வேலை நான்..தப்பித்தேன்…நான் நினைத்தது தான்…!

டாஸ் தோற்று போன தோனி… ஆனால் அதன்பின்னல் காத்திருந்த ட்விஸ்ட்.. தோனி செம ஹப்பி…! காரணம் இதோ…!!

ஐபிஎல் 2021 முறையில் நடைபெற்று வருகிறது, அதில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியும் மோதின.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐராபாத் அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமையவில்லை என்றாலும் அதன்பின்னர் பேட்டிங் செய்த வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே பார்ட்னெர்ஷிப் சிறப்பான ஒன்றாக அமைந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்த நிலையில் 171 ரன்களை விளாசியுள்ளனர். அதில் வார்னர் 57 ரன்கள், பரிஸ்டோவ் 7 ரன்கள், மனிஷ் பாண்டே 61 ரன்கள்,வில்லியம்சன் 26 ரன்கள், கெதர் ஜாதவ் 12 ரன்களை எடுத்துள்ளனர்.

பின்பு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஒவரில் 3 விக்கெட் இழந்த நிலையில் 173 ரன்களை எடுத்து வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதில் சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆன ருதுராஜ் மற்றும் டுப்ளஸிஸ் அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தனர்.

ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்தில் 75 ரன்கள், டுப்ளஸிஸ் 38 பந்தில் 56 ரன்கள், மொயின் அலி 8 பந்தில் 15 ரன்கள், சுரேஷ் ரெய்னா 15 பந்தில் 17 ரன்கள் மற்றும் ஜடேஜா 6 பந்தில் 7 ரன்களை எடுத்துள்ளார். 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றிய சிஎஸ்கே அணி, புள்ளிபட்டியலில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். டாஸ் தோற்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நான் பவுலிங் தான் எடுக்க வேண்டும் என்று நின்னிட்டுத் கொண்டு இருந்தேன். ஏனென்றால் நான் விளையாடிய முதல் போட்டியை தவற எல்ல போட்டிகளில் முதல் பேட்டிங் தான் செய்தோம்.

அதனால் சிஎஸ்கே வீரர்கள் எப்படி இரண்டாவது பேட்டிங் செய்ய போகிறார்கள் என்று நான் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் வார்னரின் இந்த முடிவு எனக்கு சாதகமாக அமைத்துள்ளது. இதில் எனக்கு சந்தோஷம் தான் என்று கூறியுள்ளார் தல தோனி.