CSK அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சில போட்டிகளில் விளையாடமாட்டார் ; CSK ரசிகர்கள் அதிர்ச்சி ;

ஐபிஎல் : ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை மொத்தம் 14 சீசன் ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்து இப்பொழுது வெற்றிகரமாக 15வது சீசன் நடந்து வருகிறது. அதிலும் கிட்டத்தட்ட 40 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

இன்னும் 30 போட்டிகள் இருக்கும் நிலையில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை. ஏனென்றால் சென்னை அணி இதுவறை விளையாடிய 8 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அதனால் புள்ளிபட்டியலிலும் 9வது இடத்தில் உள்ளது சென்னை அணி. தோல்விக்கு என்ன காரணம் என்று சரியாக சொல்ல முடியவில்லை. ஏனென்றால் ஒரு சில போட்டிகளில் பேட்டிங் மோசமாக உள்ளது. ஒரு சில போட்டிகளில் பவுலிங் மோசமாக உள்ளது. இன்னும் ஒரு சில போட்டிகளில் பீல்டிங் மோசமாக உள்ளது.

அதுமட்டுமின்றி, தோனிக்கு பிறகு சென்னை அணியை இப்பொழுது ரவீந்திர ஜடேஜா வழிநடத்தி வருகிறார். ஒருவேளை ரவீந்திர ஜடேஜாவுக்கு சென்னை அணியை சரியாக வழிநடத்த தெரியவில்லையோ என்ற கேள்விகளும் எழுந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஐபிஎல் 2022யில் அதிக விலை கொடுத்து கைப்பற்றப்பட்ட தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் இனிவரும் போட்டிகளில் சென்னை அணி வெல்லுமா என்று கேட்டால் அது சந்தேகம் தான். இதற்கிடையில், சென்னை அணியின் ஆல் – ரவுண்டரான மொயின் அலி-க்கு காலில் அடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, அதற்கான ரிப்போர்ட் இன்னும் மருத்துவ மனையில் இருந்து வராத காரணத்தால் மொயின் அலி இனிவரும் போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்பது தெரியாது.

ஆனால் நிச்சியமாக இன்னும் ஒரு சில போட்டிகளில் மொயின் லி விளையாட போவதில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. கடந்த இரு போட்டிகளில் மொயின் அலி-க்கு பதிலாக மிச்சேல் சண்ட்னர் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். ஆனால் மொயின் அலி-யை காட்டிலும் சண்ட்னர் ஆட்டம் ஒன்றும் பெரிய அளவில் இல்லை.

அதனால் மொயின் அலி மீண்டும் சென்னை அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. என்ன செய்ய போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும். முதலில் தீபக் சஹார், பிறகு ஆடம் மில்னே இப்பொழுது மொயின் அலி…!