நல்லவேளை இவர் இல்லை… இந்திய அணி !! இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது..!

இந்திய மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடந்த முடிந்த 4 டெஸ்ட் போட்டியில் 3 போட்டிகளில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஐந்து (5) டி-20 போட்டிகள் மற்றும் மூன்று (3) ஒரு நாள் போட்டிகளில் அடுத்தடுத்து நடைபெறவுள்ளது.

வருகின்ற 12ஆம் தேதி மார்ச் மாதம் முதல் டி-20 போட்டி இந்தியாவில் அஹ்மதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. டி-20 போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டி என்றே சொல்லலலாம். ஏனென்றால் அதில் 20 ஓவர் மட்டுமே இருக்கும் அதனால் அதற்குள் அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்று எல்ல அணிகளும் சரமாரியாக அடித்து ஆட முயற்சி செய்வார்கள். அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றே சொல்லலாம்.

நல்லவேளை இவர் இல்லை… இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது..!

இங்கிலாந்து அணியின் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் கையில் அடிபட்டதால் வருகின்ற டி-20 போட்டியில் விளையாட முடியாது என்று கூறப்படுகிறது. ஏனென்றால் கடந்த 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் இதன் காரணமாகத்தான் விளையாடவில்லை.

Read More : இந்த இந்திய வீரரை பார்க்கும்போது சேவாக் போல தெரிகிறது : முன்னாள் பாக்கிஸ்தான் வீரர் கூறியுள்ளார் .. யார் அந்த இந்திய வீரர்?

மருத்துவ குழுவின் அறிவுரைப்படி அவருக்கு ஆப்பரேஷன் செய்யும் நிலைமை கூட வரலாம் அல்லது நீண்ட நாட்கள் ஓய்வு தேவை படுகிறது துன்று கூறியுள்ளர்னர். கிரிக்கெட் வீரர்களுள் இவர் மிகச்சிறந்த டி-20 வீரர் என்பதில் மாற்றுக்கருத்து. இதனால் இந்திய அணிக்கு ஒரு நல்லது என்றே சொல்லலாம். இதுவரை ஐபிஎல் டி -20 போட்டிகளில் இவர் இறுதியாக அதுவும் கடைசி 4 ஓவர் பேட்டிங் செய்தால் அனைத்து பந்துகளையும் தொம்சம் செய்துவிடுவார்.

இங்கிலாந்து அணியின் பௌலர் ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு சிறப்பான டி-20 என்று இந்திய வீரர்களுக்கும் இந்திய கிரிக்ஸ்ட் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று. ஏனென்றால் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்தவர் ஜோப்ரா ஆர்ச்சர். கடந்த ஆண்டு போட்டியில் ஆல்ரவுண்டர் என்று நிரூபித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் 14 போட்டிகளில் விளையாடிய ஜோப்ரா ஆர்ச்சர் 113 ரன்களை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் இறுதியாக பேட்டிங் செய்யும் வீரர், ஆனால் இவரது ஸ்ட்ரைக் ரேட் 179.36 மிகவும் அதிகமான ஒன்று. அதுமட்டுமின்றி பௌலிங்கில் 14 போட்டிகளில் விளையாடிய ஜோப்ரா ஆர்ச்சர் 20 விக்கெட் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணி குழப்பம் ?

ஆர்ச்சர் இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரர். இவர் இல்லை என்றல் இவருக்கு பதிலாக ஒருவரை விளையாட வைப்பது மிகவும் கடினம். அதுமட்டுமின்றி t20 உலக்கோப்பை , ஆஷஸ் சீரியஸ் மற்றும் ஐபிஎல் 2021 போட்டி கூட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இவை அனைத்து கேள்விக்குறியே?