ஒருவழியாக சென்னை அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் ; இனிமேல் தான் ஆட்டமே இருக்கு ;

ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிகள் நாளை இரவு முதல் தொடங்க உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த முறை இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்த முறை விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சமில்லை.

நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர். இதில் சென்னை வீரர்கள் அனைவரும் உள்ளார்களா என்று கேட்டால் அது கேள்விக்குறியே..! ஏனென்றால் சென்னை அணியின் முக்கியமான வீரராக கருதப்படும் மொயின் அலி விசா பிரச்சனை காரணமாக அணியில் இன்னும் இணையவில்லை என்று தகவல் வெளியானது.

ஆனால் இன்று சமீபத்தில் வந்த தகவலின் படி மொயின் அலி வெற்றிகரமாக இந்திய வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கொரோனா காலம் என்ற காரணத்தால் ஒரு சில நாட்கள் யாராக இருந்தாலும் தனிமையில் இருந்து பின்னர் தான் அணியில் இடம்பெறுவார்கள் என்பதை வழக்கமாக கொண்டுள்ளது பிசிசிஐ.

அதனால் நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில் மொயின் 100 சதவீதம் விளையாட வாய்ப்புகளே இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அணிக்கு இரண்டாவது போட்டி மார்ச் 31ஆம் தேதியில் லக்னோ அணியை எதிர்கொள்ள உள்ளனர். அதில் நிச்சயமாக மொயின் அலி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

இருப்பினும் இப்பொழுது மொயின் அலிக்கு பதிலாக யார் அணியில் இடம்பெற போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. மொயின் அலி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மட்டுமின்றி சிறந்த சுழல்பந்து வீச்சாளரும் கூட. அதனால் இவருக்கு நிகரான ஒரு ஆல் -ரவுண்டர் யார் ?

வெளிநாட்டு வீரர்களில் ஆல் -ரவுண்டர் என்றால் அது மிச்சேல் சண்ட்னர். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரிய அளவில் விளையாடியது இல்லை. ஆனால் மொயின் அலி-கு பதிலாக இவரது ஆட்டம் சரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொயின் அலி-க்கு பதிலாக யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழ் உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!