CSK அணியில் ஜடேஜா விளையாடுவாரா இல்லையா ? சென்னை அணி கொடுத்த சின்ன Hint ; ஐபிஎல்

ஐபிஎல் : ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது. பின்பு குறுகிய போட்டி என்றதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது ஐபிஎல் லீக் போட்டிகள். அதனால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி உலகில் முக்கியமான போட்டியாகவும் ஐபிஎல் திகழ்கிறது. இதுவரை மொத்தம் 15 சீசன்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அறிமுகமாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் ஆன அன்று முதல் இதுவரை மகேந்திர சிங் தோனி தான் தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை மொத்தம் நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த குழப்பம் :

41 வயதான மகேந்திர சிங் தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினார். அதனால் இன்னும் சில ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் விலக அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் ரவீந்திர ஜடேஜா தான் கேப்டன் என்று அறிவித்தது சென்னை.

ஆனால் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டது. அதனால் மீண்டும் ஐபிஎல் 2022 பாதியில் சென்னை அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றார். பின்பு ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் என்ற காரணத்தால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறினார் ரவீந்திர ஜடேஜா.

ஜடேஜா மீண்டும் சென்னை அணியில் விளையாடுவாரா ?

அதனை அடுத்து சமீப காலமாகவே ஜடேஜா விரைவாக சென்னை அணியில் இருந்து விலகிவிடுவார் என்று பலர் அவரவர் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஏனென்றால், கடந்த ஐபிஎல் 2022 தொடக்கத்தில் சென்னை அணியின் பதவியில் நான் இன்னும் 10 ஆண்டுகள் சென்னை அணியில் விளையாடுவேன் என்று பதிவு செய்திருந்தார் ஜடேஜா.

ஆனால் சமீபத்தில் அதனை ஜடேஜா டெலீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஜடேஜா ஏலத்தில் பங்கேற்று சென்னை அணியில் இருந்து விலகிவிடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்து கொண்டு வருகின்றனர்.

ஆனால் சென்னை அணியின் பதிவு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், சென்னை அணி ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தை சுட்டிக்காட்டி பதிவு செய்த புகைப்படத்தில் தோனி, சுரேஷ் ரெய்னா, ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் படங்கள் உள்ளன.

அதனால் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியில் தான் விளையாடுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ஜடேஜா ஏலத்தில் பங்கேற்றால் எந்த அணியில் இடம்பெறுவார் ?