துறவி அவதாரம் எடுத்துள்ளார் தோனி வைரலாகும் புகைப்படம்

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. கடந்த அந்தஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு நடந்ததால் இந்த ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஏனென்றால் இந்த ஐபிஎல் இந்தியாவில் தான் நடைபெற போகிறது.

இந்த சமயத்தில் ஐபிஎல் போட்டியின் ஒளிப்பதிவாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தோனி புதிய ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றன.

இந்த புகைப்படத்தில் தோனி ஒரு துறவி போல காட்சி அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஒருவேளை ஐபிஎல் 2021கான விளம்பரமாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி கேள்வி சிஎஸ்கே அணியின் உரிமையாளரிடம் கேட்கப்பட்டது? அதற்கு பதிலளித்த சி.இ.ஓ. விஸ்வநாதன் தோனி அவரது பயிற்சியை தொடங்கிவிட்டார் , அவர் பயிற்சியின் போது  சிக்ஸர் அடித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார். இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பான அணியாக பார்க்கலாம் என்று ரசிகர்கள் நினைத்து கொண்டு இருக்கின்றன.