ICC WorldCup t20 2021: உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி உலகக்கோப்பை போட்டி நேற்று முதல் தொடங்கியது. இந்த முறை இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐசிசி உலகக்கோப்பை போட்டி கொரோனா காரணமாக சில பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் நடைபெறவில்லை.
அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில், ஓமன் நாட்டிலும் உலகக்கோப்பை போட்டிகளை நடத்த முடிவு செய்தது பிசிசிஐ. அதனை ஒப்புக்கொண்ட ஐசிசி , இப்பொழுது போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் பட்டியலை அறிவித்துள்ளது பிசிசிஐ.
இந்திய அணியின் விவரம் இதோ :
விராட்கோலி, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, இஷான் கிஷான், ரிஷாப் பண்ட், சூரியகுமார் யாதவ், வருண் சக்ரவத்தி, ராகுல் சஹார், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்தர ஜடேஜா, ஹார்டிக் பாண்டிய, ஷர்டுல் தாகூர், பும்ரா போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி, இந்த முறை உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக அறிவித்துள்ளது பிசிசிஐ. அதனால் தோனியின் அனுபவம் நிச்சியமாக இந்திய அணிக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா அளித்த பேட்டியில் ; இந்த முறை ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி நிச்சியமாக வெற்றி பெரும். இதுவரை தோனி தலைமையிலான இந்திய அணி மட்டும் ஒருமுறை டி-20 உலகக்கோப்பை வென்றுள்ளது.
அதனால் இந்த டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற போகிறார். அதுமட்டுமின்றி, இந்திய அணியில் அருமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதனால் இருக்கும் வீரர்களை சரியாக பயன்படுத்தி விராட்கோலிக்காக செய்யுங்கள் என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
அதுமட்டுமிண்டிர், சமீபத்தில் தான் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ஐக்கிய ரபி அமீரகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனால் வீரர்கள் அனைவரும் தயாராக தான் இருப்பார்கள் என்று கூறியுள்ளார் ரெய்னா. இந்திய அணிக்கு முதல் போட்டி வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி அன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள போகிறது.
உலகக்கோப்பை போட்டிக்கான உத்தேச ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்று உங்களுது கருத்தை COMMENTS பண்ணுங்க….!