இனிமேல் கேப்டன் ஆக இருக்க முடியாது….!! தோனியின் அதிரடி கருத்து….!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

துபாய்: பல தடைகளை தாண்டி பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது இந்த வருட ஐபிஎல் 2020 டி20 லீக் போட்டிகள். ஏனென்றால் அதற்கு காரணம் ரசிகர்கள் , இந்த வருட ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது அதுவும் ரசிகர்கள் யாரும் இல்லாமல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றே சொல்லலாம். ஏனென்றால் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியளில் 8வது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2008 ஆம் ஆண்டு முதல் முதலில் ஆரம்பித்த ஐபிஎல் போட்டி முதல் 2019 ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழையும். இந்த ஆண்டு தான் முதல் முறையாக ப்லே -ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போது. இந்த சூழ்நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு மட்டுமின்றி சென்னை அணியின் ரசிகர்களுக்கும் மிகவும் வருத்தம்தான்.

41வது போட்டியில் பொள்ளார்ட் தலைமையிலான மும்பை இந்தின்ஸ் அணியும் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கினார். முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தின்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்தது.

இந்த போட்டியில் சென்னை அணியில் இரு பேட்ஸ்மேன்கள் புதிதாக களம் இறங்கினார். அதில் ஓப்பனிங் ஆக இறங்கிய ருதுராஜ் 0 ரன்களிலும் ஜெகதீசன் 0 ரங்களில் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் களம் இறங்கிய டுபலஸிஸ் 1 ரன்கள் , ராயுடு 2 ரன்கள் ,தோனி 16 ரன்கள் , ஜடேஜா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

இறுதிவரை போராடிய சாம் குரான் 52 ரன்கள் மற்றும் இம்ரான் தாகிர் 13 ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரன்களை சேர்த்தனர். நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 114 ரன்களை எடுத்துள்ளது சிஎஸ்கே அணி. 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களம் இறங்கிய மும்பை இந்தின்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டிகாக்கின் ஆட்டம் சென்னை அணியை சாய்த்தது , அவர் ஆட்டம் இழக்காமல் 46 ரன்களை எடுத்துள்ளார். அவருடன் இணைந்து இஷான் கிஷான் 68 ரன்களை எடுத்துள்ளார்.

மும்பை இந்தின்ஸ் அணியில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விழித்தி 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் போகாமல் வெளியே போவது ஐபிஎல் சரித்திரத்தில் இதுவே முதல்முறை ஆகும். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் வேதனையில் உள்ளார்கள்.

இனிமேல் கேப்டன் ஆக இருக்க முடியாது….!! தோனியின் அதிரடி கருத்து….!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

ரசிகர்கள் எதிர்பார்த்த படி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த தோனிக்கு ஏமாற்றம். ஏனென்றால் புதிதாக களம் இறங்கிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் அவசரப்பட்டு ஆடியதால் ஒரு ரன்கள் கூட எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் வந்த இளம் வீரர் ஜெகதீசன் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால் என்ன பண்றது என்றே புரியாமல் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் தோனி.

பல ரசிகர்களும் , கிரிக்கெட் விமர்சர்கள் தோனிக்கு வயது ஆயிடுச்சு அதனால் அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலக வேண்டும் என்று பலர் சமுகவலைத்தளங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் தோனி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி வெறும் 180 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் போது அவர் பார்மில் இல்லை என்று தெரிந்த பிறகு அவர் முதலில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். அதன்பின்னர் இந்தியா கிரிக்கெட் அணியில் இருந்து விலகியுள்ளார். அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் தொடர் தோல்வியின் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்தும் கூட விலக வாய்ப்பு அதிகம் உள்ளது என்று சமுகலவலைதங்களில் பேசப்பட்டு வருகின்றன.

அப்படி இல்லையென்றால் அடுத்த ஆண்டு 2021யில் கோப்பை பெற்றுக்கொடுத்து விட்டு அவரது ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவது பற்றிய செய்திகள் வெளியிடலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.