சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி…!! சிஎஸ்கே வீரர் அணி மாற்றம் …யார் அந்த வீரர்…??

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு 2020யில் மிகவும் மோசமான விளையாட்டுகளை விளையாடி கொண்டு வருகிறது. இதற்கு காரணம் சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் கேதர் ஜாதவ் தான் காரணம் என்று பல கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சர்களும் விமர்சித்து வருகின்றனர்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 5 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

இதற்கு முழு காரணம் பேட்டிங் சரியாக விளையாடவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறி உள்ளனர். ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது மிட் டிரான்ஸ்பர் என்று ஒன்று நடக்கும் … மிட் டிரான்ஸ்பர் என்றால் அணிகளுக்கு இடையே வீரர்களை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு. அணியில் யார் அதிகம் விளையாடமல் இருக்கும் வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெறுவார்கள். அதில் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் அதிகம் விக்கெட் எடுத்த இம்ரான் தாகிர் இடம் பெற்றுள்ளார்.

ஒரு வேளை இம்ரான் தாகிர் சிஎஸ்கே அணியை விட்டு மாறிவிடுவாரா??? என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த சென்னை அணியின் உரிமையாளர் ;;; இம்ரான் தாகிர் ஒரு சிறந்த சூழல் பந்து வீச்சாளர் அவர் பல விக்கெட் எடுத்துள்ளார். அவர் இந்த ஐபிஎல் 2020 விளையாட முடியாமல் போவதற்கு பல காரணம் உள்ளன. ஆனால் அவர் அணியில் இருந்து ஒருபோதும் வெளியே போகமாட்டார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருப்பது பெருமை என்று கூறியுள்ளார்.