தோல்விக்கு தோனி காரணம் கிடையாது !! முன்னால் இந்தியா கிரிக்கெட் வீரர் கூறியுள்ளார் !!!

இந்த ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றதால் ரசிகர்கள் கேப்டன் தோனியை விமர்சித்து வருகின்றனர். சென்னை அணியின் தோல்விக்கு தோனியை மட்டும் குறை சொல்ல கூடாது , அவர் மட்டும் காரணம் கிடையாது என்று கூறியுள்ளார் இந்தியாகிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை முன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் 2020 மட்டும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் பேட்ஸ்மன் அமற்றும் தோனி தான் காரணம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

ஐபிஎல் 2020யில் இதுவரை 6 போட்டிகள் விளையாடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் 4 போட்டியில் தோல்வியையும் 2 போட்டியில் வெற்றியையும் சந்தித்துள்ளது. மூன்று தோல்விக்கு பிறகு பஞ்சாப் அணி உடனான போட்டியில் 10விக்கெட் வித்தியாசத்தில் வேற்ற பெற்றது சென்னை சூப்பர் கிங்க்ஸ். இதனால் மீண்டும் களம் இறங்கிவிட்டார் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.

ஆனால் அந்த சந்தோஷம் இரு நாட்கள் கூட இருக்கவில்லை ஏனென்றால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சென்னையின் தொடர் தோல்விக்கு கேடர் ஜதேவ் மற்றும் தோனி தான் காரணம் என்று பல கிரிக்கெட் ரசிகர்கள் , கிரிக்கெட் நிபுணர்கள் கேலி கிண்டல் மற்றும் சமுகவளைதலங்களில் அவர் விமர்சித்தும் வருகின்றன.

தோனியின் கேப்டன் பொறுப்பு: தோனி ஐபிஎல் போட்டியில் மட்டுமின்றி இந்தியா கிரிக்கெட் அணியிலும் கேப்டனாக இருந்துள்ளார். அவருக்கு ஒரு அணியை கையாளும் திறன் கண்டிப்பாக அவருக்கு என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து 2010, 2011 ஆண்டு கோப்பைவென்றுள்ளது சன்னி சூப்பர் கிங்க்ஸ் அணி.

சில பிரச்சனை காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து 2016,2017 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. ஆனால் 2019 ஆண்டு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கோப்பை கைப்பற்றி மாஸ் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை குறித்து பேசிய முன்னால் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா :

சென்னை அணிலயின் தோல்விக்கு தோனி தான் என்று கூறுவதில் நியாயம் இல்லை. அணியில் ரெய்னா இல்லாததால் அந்த இடத்தையும் அவர் கவனித்து தான் வருகிறார். தோனி இந்த ஐபிஎல் 2020 சிறப்பாக தான் விளையாடி வருகிறார்,. சென்னை அணியின் தோல்விக்கு ஒட்டுமொத்த அணியும் தான் காரணம் தோனி மட்டும் அல்ல என்று கூறியுள்ளார் பிரக்யான் ஓஜா.